ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu Quotes

Rate this book
Clear rating
ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu by Kota Shivarama Karanth
215 ratings, 4.09 average rating, 13 reviews
ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu Quotes Showing 1-30 of 40
“சீர்திருத்தத்துக்கு ஒரு கருவியாய் நாடக வடிவைப் பயன்படுத்தும் என் யோசனை பொய்யாய்ப் போனதில் நான் ஏமாற்றமுற்றேன். தொழில்முறை நாடகக்குழுக்களைக் கூர்ந்து பரிசீலித்ததில் அவர்களுக்கு இந்த நோக்கில் சற்றும் ஆர்வமில்லை என அறிந்து கொண்டேன். நாடக அரங்கம் அவர்களுக்குப் பிழைக்கும் வழி. சில தொழில்முறைக் கலைஞர்கள் இசை வல்லுநர்களாக இருந்தார்கள் என்பதில் ஐயமில்லை. எவ்வகைக் கலையிலும் திறம்பட நிகழ்த்துதல் என்பது அந்தக் கலைஞனின் தெளிவிலும் அனுபவத்திலும்தான் அமைந்திருக்கிறது. தெளிவுற அறிதல் என்பது அறிவின் அகலத்திலும் ஆழத்திலும் எடைபோட்டு ஒப்பிடும் திறமையிலும் உள்ளது. ஒரு சாதாரண நடிகனாக இருந்தாலும் பல்வகைப் பாத்திரங்களில் நடிக்க நேரும்போது, அவன் பாத்திரத்தின் பின்புலத்தைச் சற்றேனும் புரிந்துகொள்ள வேண்டும். சரியாக இன்னொரு மனிதனைப்போல் எவனும் அழுவதுமில்லை, சிரிப்பதுமில்லை. ஒரு நாடோடியின் கோபத்துக்கும் துரியோதனனின் கோபத்துக்கும் வேறுபாடு இருக்கிறது. துரியோதனன் அரச குடும்பத்தில் பிறந்தவன். அவனுடைய கோபத்தில் அவனுடைய தன்னம்பிக்கை மிளிர வேண்டும். மேலும் ஒரு மனிதன் எல்லாச் சூழல்களிலும் ஒரேமாதிரி சிரிப்பதுண்டா? அல்லது அழுவதுண்டா?

ஒரு புராணக்கதை நாடகமாக நடிக்கப்படும்போது, நடிகன் நம் தொன்மையான நாகரிகத்தோடு நெருக்கம் பாராட்ட வேண்டும். சமூக நாடகங்களில் கூட நடிப்பது எளிதல்ல. வெவ்வேறு சமூகப் படிநிலைகளிலும் பின்புலத்திலும் வாழும் மக்களின் இதயங்களில் நடிகன் நுழையும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். இந்த ஆற்றலை ஒருவன் பெற வேண்டுமானால், அவன் வாசிப்பை மேற்கொள்ள வேண்டும். ஆனால் நம் நடிகர்களில் பெரும்பாலானோருக்கு படிக்கும் பழக்கமில்லை. பலரும் படிப்பு வாசனை அற்றவர்கள். தங்கள் குறுகிய புரிதல் காரணமாக சமூக சீர்திருத்தத்தில் எழும் பிரச்னைகளை அவர்கள் உணர்வதில்லை. நாம் வாழும் முறைமைக்கும் நம் பேச்சுக்கும் இடையில் தொடர்பிருந்தாலன்றி நம் சொற்களில் உறுதி இருக்காது. இதயத்திலிருந்து வருவது எதுவோ அதுவே இதயங்களைத் தொடும். தொழில்முறை நடிகர்களிடம் இத்தகைய இதயம் இல்லை. நாடகம் ஒரு பொழுதுபோக்கு என்ற முறையில் நடிக்கும் தொழில்முறை சாரா நடிகர்களிடம் இதுவே உண்மையாகும்.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“உலகங்கள் பலவும் கூடப் பிறப்பதும் சாவதுமாக உள்ளன. கடல்களும் மலைகளும் எழுகின்றன, அழிகின்றன. எந்த வகையில் அவற்றில் வாழ்கிறவர்கள் தனித்துவம் உள்ளவர்கள்?”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“நேற்றைய மக்களின் கூட்டுச்செயல்கள் இன்றைய மக்களிடம் வந்தடைகின்றன. நாம் இன்று என்ன செய்கிறோமோ அது நாளைய மனிதருக்குச் சுமையாக மாறும். கர்மம் என்பது தனித்தனி மனிதர்கள் அல்ல; அது கூட்டாக விளைந்தது.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“இயற்கை எனக்கு அளித்திருக்கும் நெடிய வாழ்வை வாழ்ந்து பார்க்கிற நான், ஏன் இன்னும் வாழ்கிறேன் என்ற கேள்வியைக் கேட்பதே இல்லை. பல மக்களின் வாழ்க்கைக் கதை அறுபது வருமுன்பே முடிந்து விடுகிறது. எனினும் நெடிய வாழ்க்கை என்னிலும் இளையவர்களான தகுதிமிக்க பலரின் மரணத்துக்குச் சாட்சி ஆகிவிடுகிறது. யாருடைய மரணமும் என்னை நிலைகுலைய வைத்ததில்லை. மரணம் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிகழ்வு. இது எனக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் பொதுவான உண்மை. ஆனால் நன்றாக வளர்ந்து நிழலைப் பலருக்கும் அளிக்க வேண்டிய ஒரு கிளை முறிந்து விழும்போது அது ஆழ்ந்த துக்கத்தைத் தந்து விடுகிறது.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“கடந்த சில பத்தாண்டுகளாக வறுமையை அனுபவிக்கும்படியான நிலை எனக்கு நேரவில்லையெனினும் உணவுக்கும் உடைக்கும் சிக்கனமாகச் செலவிட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். ஆடம்பர ஆடைகள், பெரும் செலவு தரும் உணவுகள் ஆகியவற்றிலிருந்து விலகி நடந்திருக்கிறேன். இதனால் ஏற்படும் மிச்சத்தை யாரேனும் சிரமப்படுபவர்களுக்கு உதவலாமே என்று கருதியிருக்கிறேன்.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“1940 முதல் என் புத்தகங்களையும் கட்டுரைகளையும் வாய்மொழியாக நான் சொல்ல யாரேனும் ஒருவர் எழுதுவது என்ற வழக்கம் வந்தது. பல இளைஞர்கள் தங்களுக்கு வருமானம் தரும் வேலை கிடைக்கிற வரை இந்தப் பணியில் உதவினார்கள். ஆனால் இந்த எழுத்து வேலை செய்தவர்களில் பலரும் இலக்கியப் பயிற்சி பெற்றவர்கள் அல்ல என்பதால் நான் சொல்வதை எழுதும்போது சிக்கல்கள் எழுந்தன. எனினும் அக்கறையோடு பணியாற்றினார்கள்.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“மூன்று நான்கு ஆண்டுகள் முன்பு சென்னையில் எழுத்தாளர்களுக்குப் பரிசளிக்கும் ஒரு விழாவில் கலந்து கொள்ள சிதம்பரம் செட்டியார் அறக்கட்டளை என்னை அழைத்திருந்தது. அந்த அறக்கட்டளை நாவல், சிறுகதை, நாடகங்களுக்காக ஆண்டுதோறும் வழங்கும் பரிசுகளை ஒரு எழுத்தாளர் மூலம் தருவது வழக்கம். என் இளைய மகள் சென்னையில் வசிக்கிறாள். அதனால் அவளைப் பார்க்க ஆண்டுக்கு ஒருமுறை நான் செல்வதுண்டு. எனினும் தமிழ் எழுத்தாளர்களோடு எனக்குப் பழக்கம் இல்லை. இந்தக் குறையை ஓரளவு இவ்விழாவால் தீர்க்க முடிந்தது. ஞானபீட விருதாளர் அகிலன் இல்லத்துக்குச் சென்றேன். அத்துடன் மூத்த ஆய்வறிஞர் திரி விக்கிரமன் என்பவரையும் அறிய வாய்ப்பு ஏற்பட்டது.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“நம் அரசியல்வாதிகளுக்கு வயது நிரம்பியிருக்கிறது; அறிவு காலியாக இருக்கிறது.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“பின்னர் ஞானபீட விருது காரணமாகத் திருவனந்தபுரத்தில் Authors Guild நடத்திய அனைத்திந்திய மாநாட்டில் தலைமை வகிக்கச் சென்றேன். அங்கே ஜனதா பிரதமர் மொரார்ஜி தேசாயைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றேன். அதுகுறித்து நான் விரிவாகச் சொல்லக் கருதவில்லை. காந்திய விழுமியங்களுக்குத் தன்னைத்தானே காப்பாளனாக நியமித்துக் கொண்ட அந்த மனிதரைக் குறித்து எனக்குப் பெரிய உற்சாக உணர்வு ஏதும் இல்லை. சரண் சிங்கையும், ராஜ் நாராயணனையும் போல ஜனதா அரசின் வீழ்ச்சிக்குப் பெருமளவு அவரும் காரணம். நம் அரசியல்வாதிகளுக்கு வயது நிரம்பியிருக்கிறது; அறிவு காலியாக இருக்கிறது.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“பிற நாடுகளில் உள்ள கலைஞர்கள், அறிஞர்கள், அறிவியலாளர்களின் சாதனைகளைப் பார்த்த பிறகு என் நாட்டில் நிலவும் அறிவின் வறுமை கண்டு அதிர்ந்து போகிறேன். நமக்கு மதம், தத்துவங்களில் குறைவுகள் உண்டென்று நான் கூறவில்லை. நம் மூதாதையர் அவற்றை ஏற்றுமதி செய்யுமளவுக்கு நிறையவே தந்து சென்றிருக்கிறார்கள். ஆனால் இந்த ஏற்றுமதி நாம் ஒரு ஆன்மிக நாடென்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும்படி நம்மை அமைதிப்படுத்தி விட்டது.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“வரிகட்டுவதற்காக மேலும் கடன் வாங்கினேன்.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“சிந்திக்கத் தெரியாத குருட்டுத்தனமான ஒரு சீடனைப் பெறுவதைவிட சுயசிந்தனையுடைய எதிரியைப் பெறுவதே மேலானது.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“என் எழுத்துக்களால் மானுட வாழ்க்கைக்கு நல்கும் பங்களிப்பே நான் திரும்பச் செய்யும் கைம்மாறு. நான் சீடர் குழாத்தைப் பெருக்கி அவர்களின் புகழ்ச்சிகளைப் பெறுவதை நோக்கமாகக் கொள்ளலாகாது. அத்தகைய குழுவினர் எந்த நிலைக்கு இறங்குவார்கள் என்பதைக் கண்டு எச்சரிக்கையோடு இருத்தல் வேண்டும். சிந்திக்கத் தெரியாத குருட்டுத்தனமான ஒரு சீடனைப் பெறுவதைவிட சுயசிந்தனையுடைய எதிரியைப் பெறுவதே மேலானது.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“கடவுள் உண்டா இல்லையா என்று நான் கவலைப்பட்டதில்லை. நான் ஆத்திகனுமல்ல நாத்திகனுமல்ல.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“கிராமங்களில் நான் அலைந்து திரிந்தபோது எண்ணற்ற தாழ்த்தப்பட்ட புலையர் இல்லங்களை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் வாழ்க்கையை அறிந்தவன் நான். தங்கள் சொந்தக் கிராமங்களிலிருந்து காபித் தோட்டங்களில் போய் வேலை செய்யும் சில குடும்பங்களோடு எனக்குப் பழக்கம் உண்டு. இந்த அனுபவங்களை முன்வைத்தே 'சோமன துடி'யை எழுதினேன். எழுதி முடிக்க ஐந்து நாட்களே எடுத்துக் கொண்டேன். இந்தப் புத்தகத்தை முதன்முதல் ரசித்தது வாசகர்கள் அல்ல, ஒரு பசு. நான் தங்கியிருந்த ஒரு வீட்டுத் திண்ணையில் இந்த நாவலின் பிரதியை வைத்திருந்தேன். உள்ளே காபி சாப்பிடப் போயிருந்த வேளையில் பசியோடிருந்த ஒரு பசு அதனைத் தூக்கிக் கொண்டு போய் சில பக்கங்களைத் மென்றுவிட்டது. மங்களூரில் மனிதர்களைவிட மாடுகளுக்குப் புத்தகங்கள் அதிகம் பிடிக்கும். இந்த நிகழ்வுக்குப் பிறகு சமஸ்கிருத சுலோகமான 'வித்யா விஹீன பசு சமான' (படிப்பறிவற்றவன் மாட்டுக்குச் சமானம்) என்ற பழமொழி மீது எனக்கு நம்பிக்கை போய்விட்டது. நான் பசுவை விரட்டி ஓட்டி என் நாவல் பிரதியை மீட்டு, அது தின்றுவிட்ட பக்கங்களை மீண்டும் எழுதி வெளியிட்டேன். அதுவரை நான் என் நூல்களின் சுமார் இருநூறு அல்லது முந்நூறு பிரதிகளையே அச்சிடுவது வழக்கமாக இருந்தது. ஆனால் நண்பர்களின் பாராட்டுக்கள் காரணமாக இந்த நாவலை ஆயிரம் பிரதிகள் அச்சிட்டேன். மிகவும் பாராட்டுப் பெற்ற இந்தப் புத்தகம் முழுதும் விற்று முடியப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆயிற்று. இதனை அருமையான நூல் என்று சொன்னவர்கள் படித்துவிட்டுச் சொன்னார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“ஒரு சிக்கலான பாத்திரத்தைப் புரிந்து கொள்ள, வசனங்கள் பாடமானதும் பல ஒத்திகைகள் நடத்தப்பட வேண்டும். ஜெர்மனி நாட்டில் ஒத்திகைகள் பல மாதங்கள் ஏன் வருடங்கள் வரை நடப்பதாகக் கூறப்படுகின்றது. குறைந்தபட்சம் நான்கு மாதங்களாவது ஒத்திகைகள் நடத்தும் பழக்கம் வந்தால்தான் நம்முடைய நாடகம் கலையாக மாற முடியும். நினைப்பூட்டுபவர் (Prompter) துணையில்லாமல் வசனம் பேச முடியாத நடிகர்கள் இன்னும் நம்மிடையே உள்ளனர். வேடமிட்டுக் கொள்கிற ஆசை ஒருவருக்கு இருந்தால் பண்டிகை ஊர்வலத்தில் போய் ஆடவேண்டியதுதானே? அவருக்கு எதற்கு நாடகமேடை?”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“படிப்பறிவு மிக்க ஒரு மனிதனுக்கு எந்த ஒரு விஷயத்தைக் குறித்தும் அறிவை விரிவு செய்ய ஆங்கிலத்தில் எல்லையற்ற வாசிப்புக்குரிய வாய்ப்புகள் உள்ளன. ஒரு குழந்தைக்குக் கூட இந்த வாய்ப்பு உண்டு. பெரியவர்களுக்கு என்று பார்த்தாலும் கன்னடத்தில் அத்தகைய வாய்ப்பு மிகக் குறைவு. இளைஞர்கள் ஆசிரியர்களிடமிருந்து கூட உதவிபெற முடியாது. ஏனெனில் ஆசிரியர்களுக்கும் பார்வை நூல்கள் இல்லை. இந்தக் குறைகளை ஒரு கலைக்களஞ்சியத்தால் தீர்க்க முடியும் என்று கருதினேன். கனவு காண்பதைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது என் வழக்கம். யாருக்கேனும் இதனால் பயன் கிடைக்காவிட்டாலும் நானே கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்குமே.

இதற்கென அமர்ந்து உள்ளடக்கப் பட்டியலை நினைத்துப் பார்த்தேன். எப்படியிருந்தாலும் இந்தக் களத்தில் இறங்கிய முதல் மனிதன் அல்ல நான். ஆர்தர்மீ மிகப்பெரிய குழந்தைகள் கலைக் களஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். ஜார்ஜ் நியூவென்ஸ் கம்பெனி Pictural Knowledge என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளது. இரண்டாவதாக நான் சொன்ன நூல் எனக்கு மிகவும் பிடித்தது. ஏனெனில் வாசகர் அறிய விரும்பும் பொருளைப் பெரிய அளவில் அறிந்துகொள்ள முடியும்; வேறு சில கலைக்களஞ்சியங்கள் தகவல்களால் நிரம்பிப் பார்வை நூல்களாகும் தகுதியோடு உள்ளன. அவற்றின் நோக்கம் வினாவிடைப் போட்டிகளில் பங்கு கொள்ளும் குழந்தைகள் அடிப்படைக் கேள்விகளுக்குத் தக்க பதில் தெரிந்துகொள்ள உதவுவதாகும்.

இத்தகைய அறிவு நூல்களில் நான் கண்ட ஒரு குறை யாதெனில் அவை அறிவியல், வரலாறு, இலக்கியம் குறித்துப் பேசினாலும் நடைமுறையில் பொருளாதாரம், அரசியல் சிந்தனை, தத்துவம், அறிவியல் ஆகிய துறைகளைப் புறக்கணிக்கின்றன. எனவே கன்னடத்தில் வரப்போகும் முதல் நூல் இந்தத் துறைகளை விலக்கி விடலாகாது என்று நான் நினைத்தேன். நான் எடுத்துக்கொண்ட செயல்திட்டம் கடலென விரிந்தது. நான் இதனைச் சாதிக்கச் சரியான நெறிமுறையைப் பின்பற்ற எண்ணினேன். எல்லாம் அறிந்தவன் என்று என்னை எண்ணிக்கொண்டு நானே எல்லாப் பொருள்கள் பற்றி எழுதிவிடலாமா? அல்லது ஒவ்வொரு துறையிலும் வல்லுநராக இருப்பவர்களிடமிருந்து கட்டுரைகள் பெறலாமா? இரண்டாவது கருத்து இயல்பாகவே சிறந்தது. ஆனால் நான் கன்னட மாநிலத்தில் வாழ்கிறேன் என்பதை மறந்துவிட முடியாது. இந்த மாநிலத்தில் அறிஞர்கள் இல்லை என்பது பொருளல்ல. ஆனால் புதிய அறிவு தேடுவோருக்குக் கற்றுத்தரும் உற்சாகமோ, வாக்குறுதிகளைக் காப்பாற்றும் பண்போ அவர்களுக்கு இல்லை. என் மக்களை நான் அறிவேன். ஒரு கடிதத்துக்குப் பதில் எழுத ஆறு மாதம் எடுக்கிறவர்களை நான் நம்பியிருக்க முடியாது. அவர்களை நம்பினால் என் மரணத் தேதியை ஆயிரம் மடங்கு தள்ளிப் போட்டாலும் நான் என் வேலையை முடிக்க முடியாது. எனவே நான் தனித்துப் பயணிக்க முடிவு செய்தேன். எப்போதும் நானே தலைவனாகவும் எனக்கு நானே தொண்டனாகவும் இருந்து வந்திருக்கிறேன். வேலை தடைப்பட்டால் வேறு யாரையும் நான் குற்றம் சொல்ல முடியாது அல்லவா?”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“குழந்தை இலக்கியம் படைக்கும் தனியார் பதிப்பகங்களையும் நூலாசிரியர்களையும் புறந்தள்ளி கல்வி பற்றிய முழுப் பொறுப்பும் தனக்கு மட்டுமே உண்டு என்று கருதும் அரசு சிறார் கல்விக்கு நன்மையைவிடத் தீமையையே செய்திருக்கிறது.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“நான் மங்களூரில் இருந்த சில ஆண்டுக் காலத்தில் கனரா உயர்நிலைப் பள்ளியில் நான்கு, ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி கற்பித்தேன். என் முதுகுக்குப் பின்னால் அவர்கள் ஏதேதோ பேசினார்கள். அவர்கள் இந்தி படிக்க விரும்பவில்லை என்பது எனக்குத் தெளிவானது. அந்தப் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்கள் பலரும் வீட்டில் கொங்கிணி பேசுவார்கள். அந்த வட்டார மொழியாக இருந்தது துளு. பள்ளியில் அவர்கள் ஆங்கிலமும் கன்னடமும் படிக்க வேண்டியிருந்தது. இத்தனைக்கும் மேலே ஐந்தாவதாக ஒரு மொழிச்சுமையை அவர்கள் ஏற்க வேண்டும் என்பது சரிதானா? இத்துடன் தலைமை ஆசிரியர் அவர்கள் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார். அதன் விளைவாக சிறப்பு ஆசிரியர் பொறுப்பில் என் ஆர்வம் குலைந்தது. முதல் மொழியொன்றில் திறமை பெற்ற பிறகு பிள்ளைகள் இரண்டாவதொரு மொழியைக் கற்பது நல்லது. இலக்கண விதிகளோடு சேர்த்து மூன்று அல்லது நான்கு மொழிகளை மாணவர்கள் தொண்டைக்குள் திணித்தால் அவர்கள் எந்த மொழியையும் கற்றுக் கொள்ள மாட்டார்கள். இதனால்தான் கட்டாய இந்திக் கல்வியை நான் அன்றிலிருந்து எதிர்த்து வந்திருக்கிறேன். முதலில் பிள்ளைகள் தங்கள் வட்டார மொழியைக் கற்கட்டும்; அதன்பிறகு தேசிய மொழியையும், சர்வதேசிய மொழியையும் படிக்கட்டும்!”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“மக்கள் பெருங்கூட்டமாகத் திரள்கிற எந்தக் கோயிலையும் நான் விரும்புவதில்லை. பாண்டாக்கள் சுற்றித் திரிகிற இடத்தில் பக்தி பறந்து விடுகிறது. பெரும்பாலான மனிதர்களுக்குப் பக்தி அகவயமானது தனித்த அனுபவம் என்று தோன்றுவதில்லை. அதை ஒரு வளையலைப் போல் அணிந்து வெளிப்படையாகக் காட்டுவதிலேயே விருப்பம். அதனால்தான் பல கோயில்கள் சந்தைகளாகக் காட்சி தருகின்றன. அங்கு எப்படி சாந்தி நிலவ முடியும்? ஆற்றில், கடலில், குன்றில், வானில் காணும் அமைதியை வழிபாட்டுத் தலங்களில் நான் பார்க்கவில்லை.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“இரு பிறப்பாளர்களின் தினசரிப் புனிதச் சடங்காகிய சந்தியா வந்தனத்தை உயர்நிலைப் பள்ளியில் படிக்கப் போனபோதே விட்டுவிட்டேன். சடங்குப் பரிசுத்தமான மடியாக இருப்பதையும் தீட்டுக்கான விதிகளைக் கடைப்பிடிப்பதையும் நிறுத்தி விட்டேன். வீட்டுக்குப் போகிற சமயங்களில், பெரியவர்கள் கண்களில் மண்ணைத் தூவுகிற வகையில் குளத்தில் நீராடுவதையும், நீரில் நின்றவாறே மூக்கைப் பிடித்துக் கொண்டு ஞாபகமிருக்கும் மந்திரங்களை உச்சரிப்பதையும் செய்து வந்தேன். ஆனால் கல்லூரிப் படிப்பை நிறுத்தும் சமயத்தில் இந்த நடிப்பையும் தொலைத்துத் தலைமுழுகினேன். எனினும் இதற்குப் பதிலாக ஒரு புதிய மூடநம்பிக்கை என்னைப் பற்றிக் கொண்டது - அது காந்தியடிகள் எழுதிய ஒவ்வொரு சொல்லையும் முழுமையாக நம்புவது என்பது. சுயமான பகுத்தறிவுச் சோதனைக்கு இடம் தராவிட்டால் ஒரு மூடநம்பிக்கைக்குப் பதில் இன்னொரு மூடநம்பிக்கைக்குத் தாவிவிடுவோம் என்பதை மெல்ல உணரலானேன். மத மூடநம்பிக்கையை விட்டொழித்து விட்டு அரசியல் அல்லது கோட்பாட்டைத் தழுவிக் கொள்கிறோம். காலம், இடம் என்பவற்றைக் கடந்த ஓர் உண்மை இது எனலாம்.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“தென்னகத்தில் என்னை வியப்பில் மூழ்கடித்த ஒரு சிறப்பான படைப்பு தஞ்சாவூரின் பிரகதீசுவரர் ஆலயம்தான். மதுரை அல்லது ஹம்பியில் இருப்பதுபோல் விமானம் அத்தனை உயரமில்லையெனினும் கட்டடக்கலை அற்புதத்தில் அனைத்தையும் வென்று நிற்பது. அதன் அழகு அதற்கே உரிய தனித்தன்மை. இதைப்பேன்ற நகல்கள் பல இருந்தாலும் இதன் தகுதியை அவற்றால் எட்டிப் பிடிக்க முடியவில்லை. கம்பீரமான அதன் வாசலில் நுழைந்து அதன் முற்றத்தில் காலடி வைத்ததும் நீங்கள் வாயடைத்துப் போய்விடுகிறீர்கள். ஆரவாரம் செய்த நாக்கு மௌனத்தில் ஆழ்ந்து போய் விடுகிறது. கட்டடக் கலையின் அழகு உங்களை ஆட்கொண்டு விட்டதாகத் தோன்றுகிறது. மாபெரும் கடவுள் என்று பொருள்படும் பிரகதீசுவரர் என்ற சொல்லுக்கேற்ப கோயில் உண்மையாகவே பேருருக் கொண்டது. வானத்தைக் கீறியபடி நிற்கும் கோபுரம் சிவனின் குறியீடு. நான் கருவறைக்குள் செல்லவில்லை. செல்லவில்லை. போகும்படி எனக்குத் தோன்றவில்லை. கோயிலே எனக்குக் கடவுளாகத் தோன்றியது.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“கன்னியாகுமரி மெய்யாகவே அழகுமிக்க இடம். நம் தாயகத்தின் தென்முனையில் நின்றபடி கிழக்கு, மேற்கு, தெற்குக் கடல்களின் சங்கமத்தைப் பார்த்தவாறு விவேகானந்தரைப் போல நாமும் வியப்பில் நம்மை இழந்து விடுவோம். இயற்கையே யாத்திரைக்குரிய இடமாக இருக்கும்போது கோயிலோ கோபுரமோ அவசியமில்லை என்று எனக்குத் தோன்றியது.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“புத்தருடைய வாழ்க்கை குறித்து மிக உயர்ந்த பக்தியுணர்வு கொண்டவன் நான். அவருடைய பெயரே அன்பின் உணர்வைத் தூண்டுகிறது. நாம் நிகழ்காலத்தை அக்கறையோடு அணுகினால் அது நம் நாளையைக் கவனித்துக் கொள்ளும் என்றவர் அவர். தன் உலக வரலாற்று நூலில் புத்தருக்கும் அசோகருக்கும் உன்னதமான இடத்தை எச்.ஜி. வெல்ஸ் தந்திருக்கிறார். இவர்கள் இருவரும் மனிதப் பண்பாட்டின் சாரம் என்கிறார் அவர். சாஞ்சி நினைவுச் சின்னங்களைக் குறித்தும் இதே கருத்தைக் கூறலாம்.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“ஒரு கலைஞன் தன் நோக்கைப் புலப்படுத்தும் அளவில் மட்டுமே தன் கலைத்திறமையை பயன்படுத்த வேண்டும். அவன் பாராட்டுப் பெறும் நோக்கத்தை முன்னிலைப்படுத்துவானானால் வீழ்ச்சியின் பாதையில் பயணிப்பவன் ஆவான்.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“கர்நாடகத்தைச் சேர்ந்த சித்தையா கௌடா தவிர ஆசிரமத்தில் வேறு பலரோடும் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டேன். அவர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுப்பையா. ஒருநாள் காந்தியடிகள் அவரை அழைத்து அவருடைய பொறுப்பில் அளிக்கப்பட்ட கொசு வலைக் கொக்கிகளைத் திரும்பத் தரும்படி தெரிவித்தார். பாவம் சுப்பையா! அதை எங்கோ தொலைத்துவிட்டார். காந்தியடிகள் குற்றம் செய்த அவருக்கு ஒரு தண்டனை விதித்தார். தம் படுக்கைக்கு அருகில் இரவு முழுதும் விழிப்போடிருந்து கொசுக்களை விரட்ட வேண்டும் என்பதே தண்டனை. சின்னஞ்சிறு பிழைகளுக்குக் கூடக் கொடூரமான தண்டனையளிப்பதில் காந்தியடிகளை வெல்ல முடியாது என்று நாங்கள் உணர்ந்தோம். ஆனால் தன் சொந்தத் தவறுகளையும் இரக்கமின்றித் தண்டனைக்குள்ளாக்கினார் என்பதை நாம் மறக்க முடியாது.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“நான் மங்களூரில் வசித்தபோது (1927-30) சில நண்பர்களைத் திரட்டி இரண்டொரு நாடகங்களை நடத்தினேன். கலைக்கும் பிரசாரத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் கண்டுகொண்டேன். ஒரு கருத்தின் பிடியில் நாடகாசிரியன் அகப்படும்போது, ஒரு லட்சியத்தின் அழுத்தம் மனதில் கருக்கொள்ளும்போது தன்னுடைய பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் அதே லட்சியத்தை வெளிப்படுத்தும்படி செய்ய முயல்கிறான். கருத்து நேர்மையானதாக இருந்தாலும், சூழல் பொருத்தமானதாக இருந்தாலும் பாத்திரங்கள் நிறைவாக அமைவதில்லை. மற்ற பாத்திரங்களின் பார்வையில் பாத்திரங்களைக் காண்பதற்கும், நாடகாசிரியனின் பார்வையில் காண்பதற்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு இருக்கிறது. தீண்டாமை ஒழிப்பு, கதர், வரதட்சணை எதிர்ப்பு, குழந்தை மண எதிர்ப்பு அல்லது தேசபக்தி போன்ற ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிரபலமாக இருக்கும் விஷயங்களைச் சொல்லும்போது பார்வையாளர்களிடமிருந்து கைதட்டல் எழுகிறது. உழைப்பு, பசி பற்றிப் பேசினால் உங்கள் நாடகம் முற்போக்கானது எனக் கருதப்படலாம். ஆனால் அது பிரசாரமே தவிர கலை அல்ல. ஒரு கலைஞன் ஒரு சூழலைச் சித்திரிக்கும்போது உணர்ச்சி வசப்படாமல் அதற்குரிய பாத்திரங்களை உருவாக்க வேண்டும். அதன்மூலம் பார்வையாளர்கள் தங்கள் முடிவுகளை எடுக்கும்படி செய்ய வேண்டும். பாத்திரங்கள் பலரை மேடையில் ஏற்றி, அவர்களைத் தன் முன்முடிவுச் சித்தாந்தங்களுக்குச் சான்றுகளாக்க ஓர் ஆசிரியன் முயன்றால், அது நாடகமாக இராது.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“நாம் வாழும் முறைமைக்கும் நம் பேச்சுக்கும் இடையில் தொடர்பிருந்தாலன்றி நம் சொற்களில் உறுதி இருக்காது. இதயத்திலிருந்து வருவது எதுவோ அதுவே இதயங்களைத் தொடும்.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“கன்னடத்தில் நிகழ்ந்து வரும் எழுத்துத் திருட்டுகளுக்குக் கணக்கு வழக்கே இல்லை. ஆங்கிலத்தில் வரும் விஷயம் திருடப்பட்டு இந்திக்கு வருகிறது. தேசிய மொழியின் மீது நம் கன்னடியர்களுக்கு இருக்கும் பற்றோ என்னவோ அதைப் படித்து அப்படியே தூக்கிக் கன்னடத்தில் தங்கள் பெயரில் வெளியிட்டு வருகிறார்கள். எப்போதாவதுதான் திருட்டு கண்டுபிடிக்கப்படுகிறது.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
“காதல் உண்மையானதென்றால் அது திருமண வாழ்வுக்கு ஆதாரமாகிறது. அது இல்லையென்றால் திருமண வாழ்க்கை என்பதுகூட வேசித்தனம்தான்.”
Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu

« previous 1