(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Kota Shivarama Karanth

“கிராமங்களில் நான் அலைந்து திரிந்தபோது எண்ணற்ற தாழ்த்தப்பட்ட புலையர் இல்லங்களை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் வாழ்க்கையை அறிந்தவன் நான். தங்கள் சொந்தக் கிராமங்களிலிருந்து காபித் தோட்டங்களில் போய் வேலை செய்யும் சில குடும்பங்களோடு எனக்குப் பழக்கம் உண்டு. இந்த அனுபவங்களை முன்வைத்தே 'சோமன துடி'யை எழுதினேன். எழுதி முடிக்க ஐந்து நாட்களே எடுத்துக் கொண்டேன். இந்தப் புத்தகத்தை முதன்முதல் ரசித்தது வாசகர்கள் அல்ல, ஒரு பசு. நான் தங்கியிருந்த ஒரு வீட்டுத் திண்ணையில் இந்த நாவலின் பிரதியை வைத்திருந்தேன். உள்ளே காபி சாப்பிடப் போயிருந்த வேளையில் பசியோடிருந்த ஒரு பசு அதனைத் தூக்கிக் கொண்டு போய் சில பக்கங்களைத் மென்றுவிட்டது. மங்களூரில் மனிதர்களைவிட மாடுகளுக்குப் புத்தகங்கள் அதிகம் பிடிக்கும். இந்த நிகழ்வுக்குப் பிறகு சமஸ்கிருத சுலோகமான 'வித்யா விஹீன பசு சமான' (படிப்பறிவற்றவன் மாட்டுக்குச் சமானம்) என்ற பழமொழி மீது எனக்கு நம்பிக்கை போய்விட்டது. நான் பசுவை விரட்டி ஓட்டி என் நாவல் பிரதியை மீட்டு, அது தின்றுவிட்ட பக்கங்களை மீண்டும் எழுதி வெளியிட்டேன். அதுவரை நான் என் நூல்களின் சுமார் இருநூறு அல்லது முந்நூறு பிரதிகளையே அச்சிடுவது வழக்கமாக இருந்தது. ஆனால் நண்பர்களின் பாராட்டுக்கள் காரணமாக இந்த நாவலை ஆயிரம் பிரதிகள் அச்சிட்டேன். மிகவும் பாராட்டுப் பெற்ற இந்தப் புத்தகம் முழுதும் விற்று முடியப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆயிற்று. இதனை அருமையான நூல் என்று சொன்னவர்கள் படித்துவிட்டுச் சொன்னார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.”

Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
Read more quotes from Kota Shivarama Karanth


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!



Browse By Tag