இரா ஏழுமலை > இரா 's Quotes

Showing 1-26 of 26
sort by

  • #1
    C. Saravanakarthikeyan
    “நினைவுக‌ள் சொர்க்கம் பற்றியவை என்றாலும் நினைவுகளிலேயே வாழ்வது நரகம்.”
    சி. சரவணகார்த்திகேயன் C. Saravanakarthikeyan, ஆப்பிளுக்கு முன்: Appleukku Mun

  • #2
    “எல்லாத்தையும்‌ கேவலமா பாக்கிற கூட்டத்த நாகரிக உலகம்னு சொல்றிங்களா...?” ஏளனத்துடன்‌ கேட்டாள்‌.”
    Alli Fathima, பாண்டிச்சி (நாவல்)

  • #3
    தஞ்சை ப்ரகாஷ்
    “மங்களம்பாள ஆத்துல இளுத்து வுட்டுட்டு பாத்துகிட்டு இருந்தானுவளே. கரமுண்டானுவ, சும்மா வுடுமா? ஒரு குத்தமும் பண்ணாத அவளப் போயி போட்டா புடிச்சானுவ. தண்ணீல மெதக்க உட்டானுவ. வயித்தப் புள்ள தாச்சியப் போயி பள்ளனுவளெ உட்டு பொதச்சு அநாதையா பொணமா எறிஞ்சானுவளே? கள்ள வெறி, கரமுண்டானுவளுக்கு. அதான் ஆத்துல வெள்ளம் வந்து வூட்டையே காவேரி இழுத்துகிட்டுப் போனுது.”
    தஞ்சை ப்ரகாஷ், கரமுண்டார் வூடு | KARAMUNDAAR VOODU: நாவல் | NOVEL

  • #4
    தஞ்சை ப்ரகாஷ்
    “உங்களுக்கும் புரியாதுங்க. கெடுக்கறதுன்னா என்னங்க அது. கட்டுன புருஷன் மேல இன்னும் ஆசை வெச்சிருக்க சாதாரண அடிமைங்க அது. புரியாது. என்ன பண்ண? ஒலகம் முழுசும் பொண்ணு அடிமைதான. எப்பமும் சமுதாயம் அது எந்தச் சமுதாயமும் பெண்ணெ இனிமேகூட அடிமையாத்தான் வெச்சிருக்கும்,வெச்சிருக்கு. அது ஒடம்பு தாங்கல்லெ. அது பசிக்கிது, எரியுதுன்னு யாருக்கும் புரியல. திமிரெடுத்து ஊர் மேல போனாம்பாங்க. உமாமஹேஸ்வரியெ தனிய்யா உட்டுட்டு பத்து வருஷமா வயித்துக்கு சோறு போட்டு, பட்டு கட்டி, நகை பூட்டி, வூட்டுக்குள்ள மூடி வெச்சிருந்தானே கரமுண்டான். அப்ப ஞாபகம் இல்லியா உமா ஒரு மனுஷின்னு. ஏங்க? தைரியமா தப்பு பண்றோம்ன்னு சொல்வீங்களே? தப்புன்னு பண்றதுக்கு யாருங்க காரணம்? மோட்டார் பைக்க ஒண்ணு இருக்குன்னு, எடுத்துகிட்டு ஊர் சுத்த வேண்டியது. அது வூடு தங்காம சுத்துறில்ல, பொண்டாட்டியவும் இளுத்துகிட்டுச் சுத்தேன். நீ என்ன ஆண்டியா?”
    தஞ்சை ப்ரகாஷ், கரமுண்டார் வூடு | KARAMUNDAAR VOODU: நாவல் | NOVEL

  • #5
    தஞ்சை ப்ரகாஷ்
    “இந்த உடல் எத்தனை பரிசுத்தமோ அத்தனைக்கு அசுத்தம் என்பதை தெலகராஜுவிடம் ஒரு மிருகம் போல மூச்சு இன்றி மாயீ கற்றுக் கொண்டாள்.”
    தஞ்சை ப்ரகாஷ், கரமுண்டார் வூடு | KARAMUNDAAR VOODU: நாவல் | NOVEL

  • #6
    Ramesh Predan
    “ஆண் என்பது ஆண்குறி மட்டுமல்ல மகளே. ஆண்மையைத் துறப்பதே பேராண்மை.”
    Ramesh Predan, அவன் பெயர் சொல் [Avan Peyar Sol]

  • #7
    Ramesh Predan
    “வறுமை, உறவுகளுக்கிடையே வெறுப்பின் வெம்மையாகச் சுழித்துக்கொண்டோடுகிறது. கைப்பிடியளவு பணம் உனது மரணத்தைத் தள்ளிப்போடக்கூடிய ஆற்றல் கொண்டது.”
    Ramesh Predan, அவன் பெயர் சொல் [Avan Peyar Sol]

  • #8
    Ramesh Predan
    “உலகிலேயே தங்கள் தாய்மொழியின் பெயரைச் சரியாக உச்சரிக்கத் தெரியாத ஓர் இனமாகத் தமிழர் இருக்கின்றனர்.”
    Ramesh Predan, ஐந்தவித்தான் [Iynthavithan]

  • #9
    Qurratulain Hyder
    “மனிதன் விளக்கைப்போல் எரிந்து ஒளிர்ந்து, மங்கி, புகைந்து, அழிந்துவிட வேண்டியவன்தான். எஞ்சியிருப்பனவெல்லாம் நிகழ்ச்சிகளும் தன்மைகளும்தான்... கெளதமா!”
    Qurratulain Hyder, அக்னி நதி [Agni Nathi]

  • #10
    Charu Nivedita
    “ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு அரசியல் கட்சி இந்தியாவைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, மக்கள் பணத்தை அந்தக் கட்சிக்காரர்கள் சூறையாடுவார்கள். பிறகு, அடுத்த தேர்தலில் இதுவரை எதிர்க்கட்சியாக இருந்த கட்சி ஆட்சிக்கு வந்து அந்தக் கட்சியின் ஆட்கள் மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பார்கள்.”
    Charu Nivedita, அதிகாரம் அமைதி சுதந்திரம்/ adhigaram amaithi suthandhiram

  • #11
    Charu Nivedita
    “ஹிட்லரின் வதைமுகாம்களுக்கு யூதர்களை லாரிகளில் அள்ளிப் போட்டுக் கொண்டு போவார்கள். அதைவிடக் கொடுமையானது இந்தியாவின் மாநகர பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து.”
    Charu Nivedita, அதிகாரம் அமைதி சுதந்திரம்/ adhigaram amaithi suthandhiram

  • #12
    Charu Nivedita
    “பிணங்களிலிருந்து தனது உணவை எடுத்துக் கொள்ளும் கழுகுகளைப் போல இலங்கையில் விழும் தமிழ்ப் பிணங்களிலிருந்து தங்களுக்கு எத்தனை பாராளுமன்ற சீட்டுகள் கிடைக்கும் என்று கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றன தமிழ்நாட்டின் இரண்டு அரசியல் கழுகுகள். இலங்கைத் தமிழருக்காக கருணாநிதி விடும் கண்ணீர் அத்தனையும் வெறும் கபட நாடகம் என்பதை மக்கள் புரிந்துகொண்டு விட்டனர். இன்றைய”
    Charu Nivedita, அதிகாரம் அமைதி சுதந்திரம்/ adhigaram amaithi suthandhiram

  • #13
    “நல்லவன், கெட்டவனென்பது அவனுக்கு இருக்கும் அதிகாரத்தினை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலான நேரத்தில் அதிகாரமென்பது ஒருவனை கெட்டவனாகவே மாற்றுகிறது.”
    Sadhana, தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்

  • #14
    “வேதங்களையும் புராணங்களையும் கிழித்துப்போட்டு அதன் காகிதங்களை குதம் துடைப்பதற்குப் பாவித்தான். தான் வாழும் இந்த உலகம் ஹிட்லரின் வதைமுகாம் என்றும், சுற்றியிருப்பவர்கள் நாஜிகள் என்றும் சமூகவலைத்தளங்களில் டுவிட் எழுதினான்.”
    Sadhana, தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்

  • #15
    “ஓர் உயிரின் சாவு என்பது இன்னோர் உயிரைப் பிறப்புவிக்கிறது; அல்லது அவ்வுயிரைக் காக்க உதவுகிறது.”
    Sadhana, தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்

  • #16
    T. Dharmaraj
    “ஆனால், ஒடுக்கப்பட்டவர்களின் பேச்சு இந்தக் குறியீட்டு நிகழ்வு இல்லை என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். 'குவளையில் போடப்பட்ட பூ' பண்பாட்டின் ஆவேசக் கூச்சல். தனது கூச்சலின் அசிங்கம் வெளியே தெரியாமலிருக்க அந்நிகழ்விற்குக் குறியீட்டு முலாம் பூசிப் புனிதப்படுத்தியிருக்கிறது.”
    T. Dharmaraj, தமிழ் நாட்டுப்புறவியல் [Thamizh Naattupuraviyal]

  • #17
    M. Mukundan
    “வாழ்வதற்கு இனிமேலும் நிறையக் காலம் எஞ்சி இருக்கிறது. எப்படி வாழ வேண்டும்? தெரியவில்லை. நினைத்தால் மனது நடுங்குகிறது...”
    M. Mukundan, മയ്യഴിപ്പുഴയുടെ തീരങ്ങളിൽ | Mayyazhippuzhayude Theerangalil

  • #18
    M. Mukundan
    “எனக்கு நாடு கிடைச்சிரிச்சி. ஆனா வீடு போயிரிச்சி.”
    M. Mukundan, മയ്യഴിപ്പുഴയുടെ തീരങ്ങളിൽ | Mayyazhippuzhayude Theerangalil

  • #19
    Pudhumaipitthan
    “செய்வது சரிதான், நன்றாயிருக்கிறது என்று சொல்லவாவது வேண்டாமா? நேர்மையான புகழ் இலக்கிய கர்த்தாவுக்கு ஊக்கமளிக்கும் உணவு. இதைக் கொடுக்கக் கூடச் சக்தியற்ற கோழையான ஒரு சமூகத்திற்கு என்ன எழுதிக் கொட்ட வேண்டியிருக்கிறது!”
    Pudhumaipitthan, புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumaipithan Short Stories: முழுமையான தொகுப்பு

  • #20
    Pudhumaipitthan
    “இருள் இருந்தால்தானே ஒளி? ஒளி வராமல் போய்விடுமா? அதுவரை காத்திருக்க வேண்டியதுதான். எத்தனை காலமோ? ஒளி வரும்பொழுது நாம் இருக்க வேண்டும் என்ற அவசியமுண்டா? எனது சிருஷ்டிகள் இருந்தால் போதும்!”
    Pudhumaipitthan, புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumaipithan Short Stories: முழுமையான தொகுப்பு

  • #21
    Pudhumaipitthan
    “எங்கையோ வடக்கே இருந்து சமணன் என்றும், புத்தன் என்றும் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். அந்த முட்டாள் பயல்கள், 'கொல்லப்படாது! பாவம் கீவம்' என்று சொல்லி, ஆட்களைத் தங்கள் கட்சிக்குத் திருப்பிவிட்டார்கள். அந்தக் காலத்திலேயிருந்துதான் நம்ம பரமசிவன் முதற்கொண்டு எல்லாத் தேவாளும் சைவராகிவிட்டார்கள். காலம் அவாளை அப்படி ஆட்டி வைத்தது. முன்னே திரிபுரத்தை எரித்தாரே, இந்தச் சிவன், இப்போ அவராலே அந்தக் குருவிக் கூட்டைக் கூட எரிக்க முடியாது!”
    Pudhumaipitthan, புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumaipithan Short Stories: முழுமையான தொகுப்பு

  • #22
    Devibharathi
    “சொல்லி அழுவதற்கு யாராவது இல்லாவிட்டால் செத்தும் புண்ணியமில்லை எனத் தோன்றியது அவனுக்கு.”
    Devibharathi, நொய்யல்

  • #23
    Devibharathi
    “இனி நாலு பொட்டப்புள்ளைய வெச்சுக்கிட்டு அந்த முண்டப் புள்ளெ என்ன பண்ணுவாளோ காணா.”

    “பகவானிருக்கறே.”

    "பகவே ஆருக்கிருக்கறே? பணம் பெருத்தவனுக்குத்தே பகவே, நம்பலாட்ட ஏழபாழைக்கு எந்தப் பகவேனிருக்கறே?”
    Devibharathi, நொய்யல்

  • #24
    மயிலை சீனி. வேங்கடசாமி
    “இரேணாட்டுச் சோழர் தங்களைத் தமிழ்ச் சோழர் பரம்பரையினர் என்று தங்களுடைய கல்வெட்டிலும் செப்பேட்டிலும் எழுதியுள்ளனர். காவிரியாற்றுக்குக் கரை கட்டின பேர்போன கரிகாற் சோழனுடைய குலத்தினர் என்றும் உறையூரிலிருந்து வந்தவர் என்றும் தங்களை இவர்கள் கூறியுள்ளனர். மற்றும், சோழர்களுடைய அடையாளமாகிய புலியையே இவர்களும் தங்களின் அடையாளச் சின்னமாகக் கொண் டிருந்தார்கள். ஆகவே, இவர்கள் காவிரி பாயும் சோழ நாட்டையாண்ட சோழர்களின் பரம்பரையினர் என்பதில் சற்றும் ஐயமில்லை.”
    மயிலை சீனி. வேங்கடசாமி, களப்பிரர் ஆட்சியில் தமிழகம்: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்

  • #25
    Tarashankar Bandyopadhyay
    “மனிதன் ஓர் உதவியற்ற பிராணி. அவன் உள்ளத்தில் மிருகத்திற்குரிய காமம், குரோதம், உலோபம் யாவும், நிரம்பியுள்ளன. ஆனால் மிருகத்திற்குரிய சகிப்புத்தன்மை அவன் உடலில் இல்லை. மனிதன்”
    Tarashankar Bandyopadhyay, ஆரோக்கிய நிகேதனம் [Aarokkiya Niketanam]

  • #26
    Tarashankar Bandyopadhyay
    “மனிதன் ஓர் உதவியற்ற பிராணி. அவன் உள்ளத்தில் மிருகத்திற்குரிய காமம், குரோதம், உலோபம் யாவும், நிரம்பியுள்ளன. ஆனால் மிருகத்திற்குரிய சகிப்புத்தன்மை அவன் உடலில் இல்லை.”
    Tarashankar Bandyopadhyay, ஆரோக்கிய நிகேதனம் [Aarokkiya Niketanam]



Rss