More on this book
Community
Kindle Notes & Highlights
Read between
January 11 - January 19, 2021
பாம்ப்பியின் (Pompii)
“இந்தியாவில் சாதிமுறை உள்ளவரை இந்துக்கள் கலப்பு மணம் செய்யமாட்டார்கள்; அன்னியருடன் சமூக உறவு கொள்ள மாட்டார்கள்; இந்துக்கள் உலகின் பிற பகுதிகளுக்குப் பிழைக்கச் சென்றாலும் இந்திய சாதி உலகளாவியதொரு சிக்கலாக உருக்கொள்ளும்.”
ஆரியர்கள், திராவிடர்கள், மங்கோலியர்கள், சித்தியர்கள் ஆகியோர் அடங்கிய கலவையே இந்திய மக்கள் ஆவர்.
இவர்கள் அனைவரும் தங்களுக்கு முன்பே இங்கு வாழ்ந்து வந்தோருடன் போரிட்டுத் தங்கள் வருகையை உறுதிப்படுத்திக்
இனங்களின் கலப்பு என்பது எப்போதும் ஒரே இயல்புள்ளதாக இருக்கவேண்டும் என்று ஆகாது.
பண்பாட்டு ஒருமைப்பாட்டினால் இணைந்துள்ள இந்திய தீபகற்பத்திற்கு இணையாக ஒப்பிட்டுக் கூறக்கூடிய அளவுக்கு வேறு எந்த நாடும் இல்லை என்று துணிந்து கூறுவேன்.
இந்திய நாடு புவியியல் ஒருமைப்பாட்டினை மட்டுமே கொண்டிருக்கவில்லை. அதினினும் ஆழமும் அடிப்படையாகவும் உள்ளதான - இந்திய நாடு முழுவதையும் தழுவிய ஐயத்திற்கு இடமற்ற பண்பாட்டு ஒருமைப்பாட்டினைக் கொண்டுள்ளது.
நெஸ்பீல்டு
சாதி என்பது ‘சமுதாயத்தின் ஒரு பிரிவினர் ஒரு குழுமமாக அமைந்து பிற குழுவினருடன் எவ்வகையிலும் தொடர்பு கொள்ளாமலும் கலப்பு மணவுறவு ஏற்படுத்திக் கொள்ளாமல் தங்கள்... குழுவினரைத் தனிமைப்படுத்திக் கொள்ளுதல்; பிறருடன் கலந்து உணவு அருந்தவோ தண்ணீர் முதலியவற்றைக் குடிக்கவோ செய்யாமலிருப்பது ஆகும்.”
சர்.எச். ரிஸ்லி:
“சாதி என்பதனை ஒரு பொதுப் பெயர் கொண்ட குடும்பங்களின் அல்லது பல குடும்பங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டத்தின் தொகுப்பு என விளக்கலாம். இந்தப் பொதுப் பெயர், குறிப்பிட்ட தொழில்கள் சார்ந்ததாகவோ அல்லது புராணத் தொடர்புடைய முன்னோர் அல்லது தெய்வங்கள் வழி வந்ததாகச் சொல்லிக் கொள்வதாகவோ இந்த முன்னோர் அல்லது தெய்வங்கள் செய்து வந்த தொழிலைத் தாமும் தொடர்ந்து செய்து வருவதாகவோ அமைந்திருப்பது; சாதி பற்...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
டாக்டர் க...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
அந்தக் குழுவின் உறுப்பினராகும் உரிமை, உறுப்பினர்களுக்குப் பிறந்தவர்களுக்கு மட்டுமே உரியது. அவ்வாறு பிறந்தவர்கள் அனைவரும் உறுப்பினர்களே.
இந்தக் குழுவினர் தம் குழுவினரைத் தவிர வெளியில் வேறு எந்தக் குழுவினரோடும் மணவுறவு கொள்ள முடியாதபடி சமூகக் கட்டு திட்டங்களால் தடுக்கப்பட்டிருப்பவர்கள்.
சாதி என்பது, மதத்தின் நறுமணத்தோடு மணக்கும் அளவுவரை ‘தீட்டு’ பற்றிய கருத்து சாதியத்தின் ஒரு பண்பாகும்
சாதியின் இரு இயல்புகளாகக் கலப்பு மணத் தடையையும், தான் பிறந்த குழுவின் வழியிலான உறுப்பினராகும் தன்மையையும் அவர்முன் வைக்கின்றார். ஆயின் இவை இரண்டும் ஒரே பொருளின் இரு தன்மைகள் எனக் கூற விரும்புகின்றேன். அதாவது, அவர் கூறுவது போல இவ்விரு தன்மைகளும் இரு வேறு நாணயங்கள் போன்றவை அல்ல, ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை என்பேன். கலப்பு மணத் தடையின் விளைவாக ஒரு குழுவிற்குள் பிறந்தார்க்கே உறுப்பினராகும் உரிமை என்பதும் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் இவ்விரு இயல்புகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளன.
அகமணம் அல்லது தன் இனத்திற்குள்ளேயே மணம் செய்து கொள்ளும் வழக்கமே சாதியின் அடிப்படையான ஒரே இயல்பு எனக் கூறலாம்.
இந்திய மக்கள் ஓரியல்பான முழுமையினராவர்.
பழங்காலத்துப் பழக்கவழக்கங்களில் எச்சமாக மிஞ்சியவற்றுள் ஒன்றான புறமண வழக்கம் தொடக்ககாலச் சமுதாயங்களில் பரவலாக நிலவியது
கணங்கள் (Clan)
‘சபின்தாஸ்’
‘சகோத்ராஸ்’
அகமண முறை என்பது இந்தியர்களுக்கு அந்நியமானது என்ற உண்மையை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.
மேலும் அகமண வழக்கத்தை மீறியதற்காக விதிக்கப்படும் தண்டங்கள் புறமண வழக்கத்தை மீறியதற்காக விதிக்கப்படும் தண்டங்களை விட மிகக் கடுமையானவை.
புறமணம் என்றாலே கலந்து ஒன்றாவது என ஆகின்றது. இதனால் புற மணத்தின் விளைவாகச் சாதி என்பது இருக்க இயலாது என்பதை அறிவீர்கள். ஆனால் நம்மிடையே சாதிகள் உள்ளனவே;
இந்தியாவைப் பொறுத்த மட்டில் சாதிகளின் படைப்பு என்பது புறமணத்தை விட அகமணத்திற்கு உயர்வான இடம் அளிக்கப்பட்...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
வழக்கமாகப் புறமணம் செய்துவந்த கூட்டத்தார்மீது தன் இனத்திற்குள்ளேயே மணம் புரியும் அகமண வழக்கத்தைப் புகுத்தியது சாதியைப் படைப்ப...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
இவ்வாறு புறமணத்தைவிட அகமணத்திற்கு உயர்வான இடம் அளிக்கப்பட்டிருப்பதே சாதியின் தோற்றமாயிற்று. எனினும் இது அவ்வளவு எளிதான நிகழ்ச்சி அல்ல.
ஆண், பெண், எண்ணிக்கையில் ஏற்படும் பெரிய ஏற்றத்தாழ்வு அகமண வழக்கத்தை நிச்சயமாகத் தகர்த்து விடும்.
இறந்து போன அவளுடைய கணவனை எரிக்கும் ஈமச் சிதையிலேயே அவளையும் சேர்த்து எரித்து இல்லாமல் செய்து விடுவது.
எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் அவளை விதவையாக்கி வற்புறுத்தி வைப்பது. பிற விளைவுகளைக் கருதிப் பார்க்கும்போது, விதவையாக வைத்துக் கொண்டிருப்பதை விட அவளை எரித்து விடுவதே நல்ல தீர்வாக அமையும். எரித்து விடுவதால் மூவகைக் கொடுமைகளிலிருந்து அவளை விடுவிக்கலாம். அவள் இறந்தொழிந்து போவதால் தன் சாதிக்கு உள்ளேயோ வெளியேயோ மறுமணம் புரிந்து கொள்ளக் கூடிய பிரச்சினை தீர்ந்து போகிறது. ஆனால் அவளைக் கட்டாயப்படுத்தி விதவையாக வைத்திருப்பது எரித்து விடுவதைவிட மேலானது. காரணம் எரித்தொழிப்பதை விட அதுவே நடைமுறைக்கு ஏற்றது. மனிதத் தன்மையுடையது. எரித்துவிடுவதை ஒத்த விதவைக்கோலம் மறுமணத்தினால் ஏற்படும் கொடுமை களிலிருந்து அவளைக்
...more
ஆனால் தடை ஆணைகளை ஆக்கித் தருபவன் என்ற வகையில் ஆண், இந்த ஆணைகளுக்கு அப்பாற்பட்டவனாக இருக்கின்றான்.
இறந்து போன கணவனுடன் மனைவியை எரித்து விடுதல் 2. வற்புறுத்திப் பெண்ணை விதவையாக வைத்திருத்தல் - எரிப்பதை விட மென்மையான முறை 3. மனைவியை இழந்தவன்மீது திருமணமாகாத - பிரம்மச்சரிய ஒழுங்குமுறையைத் திணித்தல். 4. திருமணப் பருவமெய்தாத பெண்ணொருத்தியை அவனுக்கு மணமுடித்து வைத்தல்.
இந்தியாவில் சாதி மிகத் தொன்மையான நிறுவனம்; அதை அறிவதற்கு நம்பத்தக்க சான்றுகளோ எழுதப்பட்ட பதிவேடுகளோ இல்லாத நிலையில், அதுவும் உலகே மாயம் என்ற கருத்தும், வரலாற்றை எழுதி வைப்பது மடமை என்ற எண்ணமும் உள்ள இந்துக்கள் தொடர்புடைய வகையில் ஆய்வு மேலும் கடினமானது. வரலாறு
வரலாறு நெடுங்காலமாக எழுதப்படாமல் இருந்தபோதிலும் சாதிஅமைப்பு மிகத்தொன்மையானது என அறிய முடிகின்றது. பழம்பொருட்களின் கற்படிமங்கள் (fossils) தம் வரலாற்றைப் புலப்படுத்துவதுபோல, பழக்கவழக்கங்களும் நெறிமுறைகளும் எழுதப்படாதவையாயினும் சமூக அமைப்புகளில் இவை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
1. சதி அல்லது இறந்துபட்டக் கணவனின் உடலோடு அவன் மனைவியையும் சேர்த்து எரித்தல். 2. விதவை மறுமணம் புரிந்து கொள்ள முடியாதவாறு தடுத்துக் கட்டாயப்படுத்தி விதவைக் கோலம் பூண வைப்பது. 3. பேதை (சிறு பெண்) மணம்.
இந்தப் பழக்கவழக்கங்கள் ஏன் மதிக்கப்பட்டன என்பதை எடுத்துரைக்கும் ஏராளமான தத்துவங்கள் உள்ளன. ஆனால் அந்தப் பழக்கவழக்கங்கள் ஏன், எப்போது, எப்படி, யாரால் தோற்றுவிக்கப்பட்டன என்பதையோ எவ்வாறு நிலைத்து நிற்கின்றன என்பதையோ விளக்குவதற்குத் தான் எதுவுமில்லை.
சதி வழக்கம் மதித்துப் போற்றப்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன:
கட்டாய விதவைக் கோலம் ஏன் போற்றப்படுகின்றது என எனக்குத் தெரியவில்லை.
பதினெட்டாம் நூற்றாண்டில் தலைதூக்கிய தனி மனித சுதந்திரம் (Individualism) பற்றிச் சிறிதளவேனும் அறிந்துள்ள எவரும் என்னுடைய இந்த விளக்கத்தைப் பாராட்டவே செய்வர்.
எல்லாக் காலங்களிலும் இயக்கமே (Movement) முக்கியமானதாய் உள்ளது. அந்த இயக்கத்தைச் சார்ந்தே தத்துவங்கள் வளர்ந்து இயக்கத்தை நியாயப்படுத்தவும் பக்கபலமாக இருக்கவும் உதவுகின்றன.
இந்தப் பழக்கவழக்கங்களைப் பாராட்டிப் பிரபலமாக்குவதற்குத் தத்துவங்கள் தோன்றின. இந்தப் பழக்கவழக்கங்கள் கள்ளங் கபடமற்றவர்களின் நியாய உணர்வுக்கு வெறுக்கத்தக்கதாகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும் இருந்து வந்திருக்க வேண்டும். எனவே கசப்பான மாத்திரையை இனிப்பு கலந்தும் கவர்ச்சியான முலாம்பூசியும் கொடுப்பது போல இந்தப் பழக்கவழக்கங்களைப் பரப்புவதற்குத் தத்துவங்கள் தேவைப்பட்டன. இந்தப் பழக்கவழக்கங்கள் அடிப்படையில் சாதாரண வழிமுறைகளே (means); ஆனால் அவை சீரிய இலட்சியங்கள் (ideals) எனக் காட்டப்பட்டன.
சதி, கட்டாயமாகக் கைம்பெண்ணாக்குதல், குழந்தை மணம் ஆகிய பழக்கவழக்கங்கள், ஒரு சாதியின் கூடுதல் ஆண், கூடுதல் பெண் என்னும் சிக்கலைத் தீர்ப்பதையும் அகமண வழக்கத்தைத் தொடர்ந்து காப்பாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டது
சாதியின் தோற்றம் பற்றிய இந்தக் கேள்வி எப்போதுமே எரிச்சலூட்டக் கூடியது: சாதி பற்றிய ஆய்வில் இந்தக் கேள்வி வருத்தப்படக் கூடிய அளவில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. சிலர் இதனைக் கண்டும் காணாததுமாக விடுத்துள்ளனர். சிலர் தந்திரமாகத் தவிர்த்திருக்கின்றனர். சிலர் சாதியின் தோற்றம் என்று ஏதாவது இருக்கிறதா என்று கலங்கி நிற்பவராய், ‘தோற்றம்’ என்ற சொல்லின் மீது உள்ள விருப்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமற் போனால், அச்சொல்லின் பன்மை வடிவமான ‘சாதியின் தோற்றங்கள்’ என்பதே மிகப் பொருத்தம் எனக் கூறியுள்ளனர். என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் சாதியின் தோற்றம் பற்றி நான் பதறவுமில்லை, கலங்கவுமில்லை.
அகமண வழக்கத்தின் அமைப்பியக்கமே சாதிக்கு வித்திட்டது
தனி மனிதர்களே சமுதாயத்தை உருவாக்குகிறார்கள் எனக் கூறுதல் அற்பமானது.
சாதியும் வர்க்கமும் அண்டை வீட்டுக்காரர்கள் மாதிரி. மிகச் சிறிய இடைவெளியே இவ்விரண்டையும் தனித்தனியே பிரிக்கின்றது. சாதி என்பது தனித்து ஒதுக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் ஒரு வர்க்கமே ஆகும்.
இந்து சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலையில் உள்ள பிராமணர்களே மேற்கூறிய இந்தப் பழக்கவழக்கங்களைக் கண்டிப்பாகவும் கட்டுக்கோப்பாகவும் கடைப்பிடிக்கின்றனர். பிராமணர்களைப் பார்த்து, பிராமணர் அல்லாத பிற சாதியினரும் இந்தப் பழக்க வழக்கங்களைப் பரவலாகப் பின்பற்றியபோதிலும் அவர்கள் கண்டிப்பாகவும் முழுமையாகவும் இவற்றைப் பின்பற்றுவதில்லை.
பிராமணர் அல்லாதாரிடம் இப்பழக்கவழக்கங்கள் நிலவி வருவதற்குக் காரணம் பிராமணர்களிடமிருந்து அவர்கள் இதைப் பெற்றதன் விளைவே என்பதனை எளிதாக நிறுவ முடியும்,
பிராமண வர்க்கம் ஏன் தன்னைத்தானே ஒரு சாதியாக வேலியமைத்துத் தனிமைப்படுத்திக் கொண்டது என்பது முற்றிலும் வேறானதொரு கேள்வி;

