வரலாற்றாய்வாளர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று உண்டு, வரலாற்றின் மேல் நமக்கு மெய்யான ஆர்வம் ஏதுமில்லை. நமக்கிருப்பது இனம், மொழி, மதம் சார்ந்த வெறிதான். அதற்கு வரலாற்றின் சில செய்திகள் உதவும் என்றால் நாம் வரலாற்றைக் கவனிப்போம். அந்தச் செய்திகளை உரக்கக்கூவுவோம், திரித்துக்கொள்ளவும் செய்வோம். நம் வெறிகளுக்கு உதவாத வரலாறு கற்கால வரலாறு. அவற்றை மறு எண்ணமே இல்லாமல் அழிப்போம்.
Published on July 16, 2025 11:36