அன்புள்ள நண்பர்களே!
வணக்கம். மகாபாரதத்தை நவீன இலக்கியமாக மறு ஆக்கம் செய்த எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு பெருநாவல்நிரையின் மீதான கலந்துரையாடல் 2017ம் ஆண்டு முதல் புதுவையில் மாதாந்திர கூடுகையாக நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக 2025ம் ஆண்டு முழுவதும் வெண்முரசின் ஒன்பதாவது நூலான “வெய்யோன்” குறித்து நிகழவிருக்கிறது.
புதுவை வெண்முரசுக் கூடுகையின் 82 வது அமர்வு 30-05-2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியில் நண்பர் இராச மணிமேகலை உரையாற்றுவார்.
நிகழ்விடம் : கிருபாநிதி அரிகிருஷ்ணன் “ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி, # 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001. தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306
பேசு பகுதி: வெண்முரசு நூல் – 9. “வெய்யோன்” பகுதி 5 பன்னிரண்டாவது பகடை – 41 – 45 அத்தியாயம். (1 – 5 )
நிகழ்ச்சியில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்களையும்ஆர்வமுள்ளவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கிருபாநிதி அரிகிருஷ்ணன்
Published on May 26, 2025 11:31