01இரவின் பேராற்றைதேங்கச் செய்கிறதுகுழந்தையின் அழுகை.கண்ணீர் கனத்துகன்னங்கள் ஈரலித்துஎதற்காய் அழுகிறான்என் குழந்தை?இத்தனை தளும்பல்கள்இத்தனை பாஷைகள்எதுவும் உணர்த்தாதஅழுகையில்எத்தனையோ நரம்புகள்அதிர்ந்து ஒலிக்கின்றன. 02இலைகளுதிர்ந்த மரத்தின் கிளையமர்ந்துஇறகுதிர்க்கும் பறவைநினைவின் திசையழிந்த புலனமர்ந்துஅதிர்ந்தெழும். 03வண்ணத்துப்பூச்சியைவாத்துப்பூச்சிஒட்டகச்சிவிங்கியைஓச்சுவங்கிவரிக்குதிரையைவய்க்குதிரைபுலியைபுய்யிஎன்றழைக்கும் மகனின்மழலைச் சொல்கேட்டு வளர்கிறேன்.எவ்வளவு இனிமையானகாடுஇந்த வாழ்வு.
The post இந்த வாழ்வு first appeared on அகரமுதல்வன்.
Published on April 18, 2024 11:21