இந்த வாழ்வு

    01இரவின் பேராற்றைதேங்கச் செய்கிறதுகுழந்தையின் அழுகை.கண்ணீர் கனத்துகன்னங்கள் ஈரலித்துஎதற்காய் அழுகிறான்என் குழந்தை?இத்தனை தளும்பல்கள்இத்தனை பாஷைகள்எதுவும் உணர்த்தாதஅழுகையில்எத்தனையோ  நரம்புகள்அதிர்ந்து ஒலிக்கின்றன.    02இலைகளுதிர்ந்த மரத்தின் கிளையமர்ந்துஇறகுதிர்க்கும் பறவைநினைவின் திசையழிந்த புலனமர்ந்துஅதிர்ந்தெழும்.    03வண்ணத்துப்பூச்சியைவாத்துப்பூச்சிஒட்டகச்சிவிங்கியைஓச்சுவங்கிவரிக்குதிரையைவய்க்குதிரைபுலியைபுய்யிஎன்றழைக்கும் மகனின்மழலைச் சொல்கேட்டு வளர்கிறேன்.எவ்வளவு இனிமையானகாடுஇந்த வாழ்வு.

The post இந்த வாழ்வு first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2024 11:21
No comments have been added yet.


அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.