தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் திருமதி.சண்முகவடிவு மற்றும் அவரது தோழிகள் இணைந்து குழந்தைகளுக்காக அறிவுச்சுடர் படிப்பகம் என்ற நூலகத்தை நடத்தி வருகின்றனர். இங்கே தினமும் மாலையில் சிறுவர்கள் கூடி நூல்களை வாசிக்கிறார்கள்.

இவர்களைப் பாராட்டும்விதமாக தூத்துக்குடியில் சலூன் நூலகம் நடத்தி வரும் மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் ஜெயபால், அருண்பிரசாத் ஆகியோர் எனது நூல்கள் உள்ளிட்ட ஐம்பது நூல்களை அறிவுச்சுடர் நூலகத்திற்குக் கொடையாக வழங்கியுள்ளார்கள்.

நூலகமனிதர்கள் என்ற வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்கும் மாரியப்பனுக்கும் அவரது நண்பர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றியும் பாராட்டுகளும்.
Published on March 12, 2023 19:41