நிலவறைக் குறிப்புகள் Quotes

Rate this book
Clear rating
நிலவறைக் குறிப்புகள் நிலவறைக் குறிப்புகள் by Fyodor Dostoevsky
13 ratings, 4.62 average rating, 4 reviews
நிலவறைக் குறிப்புகள் Quotes Showing 1-25 of 25
“நம்முடைய முட்டாள்தனமான வேண்டுதல்கள் தப்பித் தவறிப் பலித்துப்போய்விட்டால் நாம் இன்னும் கூட மோசமாகிவிடுவோம்.”
Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்
“இதை இலக்கியம் என்று சொல்வதைவிட என் தவறுகளைத் திருத்திக்கொள்வதற்கான தண்டனை என்று சொல்வதே சரியானதாக இருக்கும்.”
Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்
“உண்மையில் எனக்குள் நானே இப்படி ஒரு சிறிய கேள்வியைக் கேட்டுக்கொள்கிறேன்... எது நல்லது? மலிவான சந்தோஷமா அல்லது உன்னதமான வேதனையா? இவற்றுள் சிறந்தது எது?”
Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்
“தன்னுடைய உரிமையைத் தானாகவே முன்வந்து விட்டுக்கொடுக்கும் ஒரு ஜீவனை வதைப்பது மட்டும்தான் காதலாக இருக்க முடியும் என்று நினைக்கும் எல்லைவரை கூட என் சிந்தனை என்னை இட்டுச் சென்றிருக்கிறது.”
Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்
“என்னைப் பொறுத்தவரை இந்த உலகம் எக்கேடு கெட்டுத் தொலைந்து போனாலும் எனக்கொன்றும் இல்லை. எனக்கு ஒரு கோப்பைத் தேநீர் கிடைத்தால் அது போதும்.”
Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்
“ஒருவரால் ஏழையாகவும் அதே நேரத்தில் கௌரவமாகவும் இருக்க முடியும்.”
Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்
“நான் இழிவுபடுத்தப்பட்டிருந்ததால் வேறு யாரையாவது நானும் இழிவுபடுத்த வேண்டுமென விரும்பினேன்.”
Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்
“பொதுவாக அம்மாக்களை விடவும் அப்பாக்களே தங்கள் பெண்கள்மீது எப்போதும் அன்பு வைத்திருப்பவர்கள். எனக்கு மட்டும் பெண் குழந்தைகள் இருந்திருந்தால் திருமணம் செய்துகொள்ள அவர்களை நான் அனுமதித்திருக்கவே மாட்டேன் என்றுகூட நினக்கிறேன்.'

"ம்...அப்புறம்" என்று மிக இலேசாகக் கீற்றோடிய ஒரு புன்னகையோடு கேட்டாள்.

"எனக்கு அது பொறாமையாக இருக்கும். வேறு யாரோ ஒருவரைப் போய் அவள் முத்தமிடுவதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. தன்னுடைய தந்தையை விடக் கூடுதலாக ஓர் அந்நியனை அவள் நேசித்தாக வேண்டும் என்பதை கற்பனை செய்து பார்ப்பதுகூட மனதை வலிக்கச் செய்யும். ஆனால் அப்படி நினைப்பது நிச்சயமாக முட்டாள்தனம்தான். கடைசி கடைசியாக எல்லா தகப்பன்மார்களுமே கொஞ்சம் அறிவுக்குப் பொறுத்தமான விதத்தில்தான் நடந்துகொள்ள வேண்டும் என்பதும் நிஜம்தான். ஆனால், திருமணம் செய்துகொள்ள என் பெண்ணை அனுமதிக்கும் வரை நான் கவலைப்பட்டே சாவேன். அவளுக்கு வரும் வரன்கள் மீதெல்லாம் ஏதாவது குற்றம் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பேன். ஆனால் இறுதியில் எப்படியோ அவள் மனம் விரும்பும் ஒருவனுக்கு அவளை நான் மணம் செய்து வைத்துத்தான் ஆகவேண்டும். தன்னுடைய பெண்ணின் காதலுக்கு உரியவனாகிவிட்ட ஒருவன், எப்போதுமே அவளது தகப்பனின் கண்ணுக்கு மோசமானவனாகத்தான் படுவான் தெரியுமா?. ஆமாம், அது எப்போதுமே அப்படித்தான். பல குடும்பங்களில் பிரச்சினைகள் ஆரம்பிப்பது அதிலிருந்துதான்.”
Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்
“மற்றவர்களைக் குறை சொல்வதற்கு முன்பு, முதலில் நாம் வாழக் கற்றுக்கொண்டாக வேண்டும்.”
Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்
“ஒரு மனிதன் பொதுவாகத் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே யோசிப்பானே தவிர தனக்குக் கிடைத்திருக்கும் நன்மைகளை எண்ணிப்பார்ப்பதே இல்லை. அவற்றைப் பற்றியும் அவன் சிந்தித்தான் என்றால் ஒவ்வொருவருக்குமே ஏதோ ஒரு வகையில் போதுமான அளவு நன்மையும் மகிழ்ச்சியும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதை அவன் உணர்ந்துகொண்டு விடுவான்.”
Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்
“சிமோனாவ் பணத்தை உருவி எடுத்து கிட்டத்தட்ட என்மீது வீசி எறிந்தான்.

"வெட்கம் மானம் எதுவுமே உனக்கு இல்லையென்றால் அதை எடுத்துக்கொள்" என்றான்”
Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்
“அறிவுக்கு அளவுகோலாக அவர்கள் கொண்டிருந்தது பதிவியை மட்டுமே.”
Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்
“புத்தகம் வாசிப்பதைத் தவிர எனக்கு வேறு புகலே இல்லாமல் இருந்தது; என்னைச் சுற்றி இருந்தவற்றில் நான் மதித்து ஆர்வம் காட்டக்கூடிய அளவுக்கோ, என்னைக் கவரக் கூடிய வகையிலோ எதுவுமே இல்லை.”
Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்
“உண்மையான சுயசரிதை எழுதுவது என்பது, பெரும்பாலும் முடியவே முடியாத ஒரு செயல் என்றும், மனிதனால் தன்னைப் பற்றிப் புளுகாமல் இருக்கவே முடியாது என்றும் கூறுகிறார் ஹெயின்”
Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்
“நல்லதோ கெட்டதோ எல்லாவற்றையும் நொறுக்கிப்போட்டுவிடுவது சில நேரங்களில் எவ்வளவு இன்பமளிப்பதாக இருக்கிறது?”
Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்
“சில வேளைகளில் துன்பத்தை அனுபவிக்க வேண்டுமென்ற பேராவல் வெறித்தனமாக, மிகையாக, வித்தியாசமான முறையில் மனிதனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அது மறுக்க முடியாத ஓர் உண்மைதான். அதை நிறுவுவதற்கு நீங்கள் மனிதகுல வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. இந்த உலகில் நீங்களும் ஒரு மனிதராக வாழ்க்கை நடத்தியிருந்தால், உங்களை நீங்களே கேட்டுப் பார்த்தால் போதும்.”
Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்
“மனிதன் ஒரு வேடிக்கையான ஜந்து”
Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்
“மனிதர்களை முகத்துக்கு முகம் நேரடியாகப் பார்ப்பதென்பது என்னால் ஒருபோதும் முடியாது.”
Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்
“என்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் எல்லாரையும்விட நான் அறிவாளியாக இருப்பதுதான் என் முதல் குற்றம்.”
Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்
“ஒரு மனிதன் முழுமையான தன்னுணர்வுடன் இருப்பதும்கூட ஒரு நோய்தான்.”
Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்
“நாகரிகமான ஒரு மனிதன் அதீதமான மகிழ்ச்சியோடு எதைப் பற்றிப் பேசுவான்?

பதில்: அவனைப்பற்றி மட்டும்தான்.”
Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்
“சாப்பாட்டுக்கு ஏதாவது ஒரு வழி வேண்டுமே என்பதற்காகத்தான் அதற்காக மட்டுமே நான் அந்த வேலையில் இருந்தேன். போன வருடம் என் தூரத்து உறவினர் ஒருவர் தன் உயிலில் ஆறாயிரம் ரூபிள்களை எனக்காக விட்டுவிட்டு இறந்துபோனபின் உடனடியாக நான் பார்த்துக்கொண்டிருந்த அரசாங்க வேலையை விட்டுவிட்டு மூலையில் முடங்கிக்கொண்டேன். இதற்கு முன்னரும் இதே மூலையில் இருந்தவன்தான் நான். ஆனால், இப்போதோ நிரந்தரமாக அதிலேயே குடியேறிவிட்டேன்.”
Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்
“நாற்பது வயதுக்கு மேல் வாழ்பவர்கள் யார் சொல்லுங்கள். இதற்கான பதிலை உண்மையாகவும் நேர்மையாகவும் சொல்லுங்கள் பார்ப்போம். நான் சொல்கிறேன். முட்டாள்களும் உருப்படியில்லாத பேர்வழிகளும்தான் அப்படி வாழ்வார்கள். வணக்கத்துக்கும் போற்றுதலுக்கும் உரிய நரைத்த முடிகொண்ட எல்லா கிழங்களின் முகங்களுக்கும் நேராகவே நான் இதைச் சொல்வேன். இதைச்சொல்லுவதற்கான உரிமை எனக்கு இருக்கிறது. காரணம் நானே அறுபது வயது வரை வாழப்போகிறேன் எழுபது வரை எண்பது வரை. பொறுங்கள் கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொள்கிறேன்.”
Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்
“நாற்பது வயதுக்கு மேலும் வாழ்வதென்பது அநாகரிகமானது, அருவருப்பூட்டுவது, அறநெறிகளுக்கே எதிரானது.”
Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்
“நல்ல குணங்கள் கொண்டவனாய்ச் செயல்படும் மனிதன் வரையறைகளுக்கு உட்பட்ட ஒரு ஜந்து மட்டுமே.”
Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்