Jump to ratings and reviews
Rate this book

நிலவறைக் குறிப்புகள்

Rate this book

208 pages, Paperback

Published December 1, 2017

5 people are currently reading
17 people want to read

About the author

Fyodor Dostoevsky

3,339 books74.1k followers
Фёдор Михайлович Достоевский (Russian)

Works, such as the novels Crime and Punishment (1866), The Idiot (1869), and The Brothers Karamazov (1880), of Russian writer Feodor Mikhailovich Dostoyevsky or Dostoevski combine religious mysticism with profound psychological insight.

Very influential writings of Mikhail Mikhailovich Bakhtin included Problems of Dostoyevsky's Works (1929),

Fyodor Mikhailovich Dostoevsky composed short stories, essays, and journals. His literature explores humans in the troubled political, social, and spiritual atmospheres of 19th-century and engages with a variety of philosophies and themes. People most acclaimed his Demons(1872) .

Many literary critics rate him among the greatest authors of world literature and consider multiple books written by him to be highly influential masterpieces. They consider his Notes from Underground of the first existentialist literature. He is also well regarded as a philosopher and theologian.

(Russian: Фёдор Михайлович Достоевский) (see also Fiodor Dostoïevski)

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
9 (69%)
4 stars
3 (23%)
3 stars
1 (7%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Dhulkarnain.
86 reviews2 followers
March 9, 2023
ஒரு மனிதனுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையையும், இயலாமையையும், வீண் கர்வத்தையும் அவனைச் சுற்றி உள்ள போலி நண்பர்களின் உளவியலையும் அப்பட்டமாக இந்த நாவலில் தஸ்தாவ்ஸ்க்கி எழுதியிருக்கிறார். அட்டகாசமான தமிழ் மொழிபெயர்ப்பு.
Profile Image for Sivasankaran.
60 reviews8 followers
June 6, 2023
நிலவறைக் குறிப்புகள்
பியோதர் தஸ்தயெவ்ஸ்கி
நற்றிணை பதிப்பகம்
.
.
.
.
உளவியலுக்கு ஆதாரமாக இருப்பதும், உளவியலின் பிறப்பிடமும் தத்துவங்கள் தான். தத்துவங்கள் தான் மனிதனின் அக சிக்கல், சமூக புரிதல், யதார்த்தத்தை அணுகும் முறை என பலவற்றிற்கு காலங்காலமாக பல நபர்களால், பெரிய ஆளுமைகளால் விளக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.

பிராய்டின் 'கனவுகள்' சார்ந்த புத்தகமும் கூட கனவுகள் தத்துவங்களில் எப்படி எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்று ஆராய்ந்து எழுதிய பின் தான் தன்னுடைய கனவுகள் சார்ந்த எண்ணங்களை அவர் எழுதியிருப்பார். அவ்வகையில்,
"தஸ்தயெவ்ஸ்கி" உளவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கும் முன்னே, அக்காலத்திலே, மனித மனங்களை மிகவும் ஆழமாக, நுண்ணியமாக ஆராய்ந்து அனுபவப்பட்டு எழுதியிருப்பதால் இவரையும் கூட உளவியலுக்கு முன்னோடி என்றே சொல்லலாம்.

நிலவறை - கிழிந்த உடைகள், சிதறிக்கிடக்கிற புத்தகங்கன, துர்நாற்றம் பரவி கிடக்கிற சுற்றம், இப்படி இன்னும் அவலங்கள் என சொல்லப்படுகிற அவைகளால் நிரம்பிய இடத்தில் அழுகி கொண்டிருக்கும் உணர்வினில் உலாவித் திரியும் ஒரு புழு, பேன், பூச்சிகளையும் விட தன்னுணர்வில் அவதிக்குள்ளாகிற ஒரு அற்ப மனிதன்.

முதல் பாகத்தில், முழுக்க முழுக்க, Monologueகளால் நிறைந்ததாக உணரமுடிந்தது.
சுய விமர்சனம் செய்து ஆனால் அதையும் மறுத்து வேறொன்று பேசுவது, பின், இதுவும் வேண்டாம் முடிவில் ஒன்றை பேசும் போது; ஒரு வித காரணமற்ற வெறுப்பும், தீவிரத்தன்மை, போலித்தனம் என பல வற்றை நாமும் மனதளவில் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்ய வழியை வகுத்து கொடுக்கிறது.
உதாரணமாக, நிராதரவான, ஊசலாட்ட நிலையில் இருக்கும் மனிதர்கள், தெளிவாக இருக்கும் மதிப்புமிக்க மனிதர்கள் என இரு தரப்பினர் பக்கம் நின்றும் யோசிக்கும் வாய்ப்பை இந்நாவல் எளிதில் வழங்கி விடுகிறது.
அதனால் என்னவொ, உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில், வெறுமையில் குவியலில், துன்பத்தின் ஆக்கிரமிப்பில் இப்படி பலவித அகம் சார்ந்த தன்னுணர்வினை பெருமளவில் உணர முடிகிறது.

இரண்டாம், மூன்றாம் பாகத்தில் இருப்பதெல்லாம் சின்ன சின்ன நிகழ்வுகள் தான் ஆனால் அதனூடே உலாவித் திரியும் நிலவறை மனிதன் காட்டும் வெறுப்பு, பெருமிதம், இழிநிலை போன்ற பல உணர்வுகள் எல்லாம் உச்சம் அடைகிற தருணங்களில் அந்த நிலவறை மனிதன் தன்னை தானே பீட்டர்ஸ்பர்க் நகர்த்தில், நல்ல சதுப்பு நிலமொன்றில், பனி சூழ்கிற நேரத்தில், யாருக்காகவோ தோண்டி வைப்ப்பட்டிருக்கிற சவக்குழியில் தானே எப்படி போய் விழுந்து கொள்ளலாம் என்று சிந்தித்து கொண்டது போல தானிருக்கும்.

"This is predominantly about one's way to entering deep into the abyss. Nonetheless, he feels gloomy here also inversely he has contradictions on what he thinks. With these monologues, he wants to make us conscious that "why mankind is always ready to detach from reality?".

#சிவசங்கரன்
Profile Image for Pari Tamilselvan.
15 reviews7 followers
May 12, 2022
கனவான்களே! ஒரு மனிதன் முழுமையான தன்னுணர்வுடன் இருப்பதும் கூட ஒரு நோய்தான்.

Notes from underground reading experience

https://paritamilselvanoff.wixsite.co...
Profile Image for Ram.
120 reviews
December 17, 2025
நிலவறைக் குறிப்புகள் வெறும் நாவல் அல்ல அது மனித இயல்பின் இருண்ட பக்கங்களை இரக்கமின்றி வெளிச்சத்துக்கு கொண்டுவரும் உளவியல் ஆவணம். அது அசௌகரியப்படுத்தும், கேள்விகளை எழுப்பும், சிந்திக்கவைக்கும்.

நாவல் இரண்டு வேறுபட்ட, ஆனால் ஒன்றோடொன்று இணைந்த பகுதிகளாக அமைந்திருக்கிறது. இந்த இரட்டை கட்டமைப்பு படைப்பின் சக்தியின் ஆதாரம் என சிந்தனையும் செயலும், கோட்பாடும் நடைமுறையும் ஒன்றோடொன்று உரையாடுகின்றன. நாவலின் முதல் பகுதியின் மையக்கருத்து பகுத்தறிவுக்கு எதிரான கடுமையான விமர்சனம். இது இருபதாம் நூற்றாண்டு இருத்தலியவாதத்தின் அடித்தளம்.

இரண்டாம் பகுதியில் வரும் உணவக காட்சி எனக்கு நாவலின் மிக நினைவில் நிற்கும் பகுதி.

நாவலின் மிக புதுமையான அம்சம் அதன் நடை. நிலவறை மனிதன் தன்னுடன் பேசுவதில்லை , நேரடியாக வாசகனிடம் பேசுகிறான். சில இடங்களில் அவன் வாசகனை தாக்குகிறான், அவமானப்படுத்துகிறான். இது வாசகனை வெகுவாக அசௌகரியப்படுத்துகிறது. இது எப்படியென்றால், நாம் பாதுகாப்பான தூரத்தில் ஒரு கதாபாத்திரத்தை கவனிக்கமுடியாது, நாமும் அதில் இழுக்கப்படுகிறோம். இந்த உத்தி மிகவும் நவீனமானது, இருபதாம் நூற்றாண்டில் பல எழுத்தாளர்கள் இதை பயன்படுத்தினார்கள்.

நாவல் தத்துவ விமர்சனம் மட்டுமல்ல, சமூக விமர்சனமும் கூட. பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்யாவில் நிலவிய வர்க்க பிரிவுகள், அவமானங்கள், போலித்தனங்கள் - இவை அனைத்தும் வெளிப்படுகின்றன. ஆனால் தஸ்தாவெஸ்கி நேரடியான பிரச்சார இலக்கியம் எழுதவில்லை. சமூக பிரச்சனைகள் கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் இயல்பாக வெளிப்படுகின்றன, அதனால் இன்னும் சக்திவாய்ந்தவை. இருபதாம் நூற்றாண்டில் வந்த உளவியல் நாவல், நனவோட்ட நாவல் போன்ற அனைத்துக்கும் இது அடித்தளம்.

'நிலவறைக் குறிப்புகள்' உலக இலக்கியத்தின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்று. மறுக்கமுடியாத முக்கியத்துவம் கொண்ட நாவல். வாசிப்பது எளிதான படைப்பு அல்ல, ஆனால் முயற்சிக்கு மதிப்புள்ளது. இது நாவல் மட்டுமல்ல, தத்துவ உரை, உளவியல் ஆய்வு, சமூக விமர்சனம், இலக்கிய பரிசோதனை என எல்லாம் ஒன்று. இதை வாசிக்காமல் நவீன இலக்கியத்தை புரிந்துகொள்ளமுடியாது.

மனித இயல்பின் இருண்ட உண்மைகளை எதிர்கொள்ள தயாரானவர்கள் மட்டுமே வாசிக்கவேண்டும். ஆனால் அதை எதிர்கொண்டால், அது மாற்றும் அனுபவம். நீங்கள் அதன்பின் அதே மனிதராக இருக்கமாட்டீர்கள். இதுவே பெரிய இலக்கியத்தின் அடையாளம்.
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.