(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Fyodor Dostoevsky

“பொதுவாக அம்மாக்களை விடவும் அப்பாக்களே தங்கள் பெண்கள்மீது எப்போதும் அன்பு வைத்திருப்பவர்கள். எனக்கு மட்டும் பெண் குழந்தைகள் இருந்திருந்தால் திருமணம் செய்துகொள்ள அவர்களை நான் அனுமதித்திருக்கவே மாட்டேன் என்றுகூட நினக்கிறேன்.'

"ம்...அப்புறம்" என்று மிக இலேசாகக் கீற்றோடிய ஒரு புன்னகையோடு கேட்டாள்.

"எனக்கு அது பொறாமையாக இருக்கும். வேறு யாரோ ஒருவரைப் போய் அவள் முத்தமிடுவதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. தன்னுடைய தந்தையை விடக் கூடுதலாக ஓர் அந்நியனை அவள் நேசித்தாக வேண்டும் என்பதை கற்பனை செய்து பார்ப்பதுகூட மனதை வலிக்கச் செய்யும். ஆனால் அப்படி நினைப்பது நிச்சயமாக முட்டாள்தனம்தான். கடைசி கடைசியாக எல்லா தகப்பன்மார்களுமே கொஞ்சம் அறிவுக்குப் பொறுத்தமான விதத்தில்தான் நடந்துகொள்ள வேண்டும் என்பதும் நிஜம்தான். ஆனால், திருமணம் செய்துகொள்ள என் பெண்ணை அனுமதிக்கும் வரை நான் கவலைப்பட்டே சாவேன். அவளுக்கு வரும் வரன்கள் மீதெல்லாம் ஏதாவது குற்றம் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பேன். ஆனால் இறுதியில் எப்படியோ அவள் மனம் விரும்பும் ஒருவனுக்கு அவளை நான் மணம் செய்து வைத்துத்தான் ஆகவேண்டும். தன்னுடைய பெண்ணின் காதலுக்கு உரியவனாகிவிட்ட ஒருவன், எப்போதுமே அவளது தகப்பனின் கண்ணுக்கு மோசமானவனாகத்தான் படுவான் தெரியுமா?. ஆமாம், அது எப்போதுமே அப்படித்தான். பல குடும்பங்களில் பிரச்சினைகள் ஆரம்பிப்பது அதிலிருந்துதான்.”

Fyodor Dostoevsky, நிலவறைக் குறிப்புகள்
Read more quotes from Fyodor Dostoevsky


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From


Browse By Tag