আদর্শ হিন্দু হোটেল Quotes

Rate this book
Clear rating
আদর্শ হিন্দু হোটেল আদর্শ হিন্দু হোটেল by Bibhutibhushan Bandyopadhyay
4,914 ratings, 4.50 average rating, 747 reviews
আদর্শ হিন্দু হোটেল Quotes Showing 1-12 of 12
“இங்கே முப்பத்தைந்து வயசுக்குள் அவனவன் கழுத்தில் துளசிமணி மாலையைப் போட்டுக் கொண்டு இந்த உலகத்தை மறந்து பரலோக சிந்தனையில் ஈடுபடுகிறான். நம் கிராமம் இருக்கிற நிலையைப் பார்த்தாயில்லையா? வாழவேண்டிய நாளெல்லாம் வாழத் தெரியாமல், அங்கங்கே போய் நாலு விஷயங்களைப் பார்க்காமல், அநுபவிக்கவும் தெரியாமல் கிடக்கிறாங்களே; இவர்கள் பரலோகத்தில் போய் என்ன சாதித்துவிடப் போகிறார்கள், சொல்! அங்கேயும் பேய் பிசாசுக்கு பயந்து நடுங்குவார்கள்போல் இருக்கிறது. ஏன், நரகந்தான் கிட்டும், இந்த மாதிரி ஆசாமிகளுக்கு! நீயே சொல்; இப்படி வேலைவெட்டியின்றிச் சோம்பித்திரியும் பயங்கொள்ளிகளுக்குச் சொர்க்கத்தில் இடங்கிடைக்குமா? ஆண்டவன் அப்படி அனுக்கிரகம் செய்வாரா?”
Bibhutibhushan Bandyopadhyay, আদর্শ হিন্দু হোটেল
“இதோ பார், உன் வயசுக்கும் என் வயசுக்கும் அப்படி ஒன்றும் அதிக வித்தியாசம் இல்லை. உனக்கு ஐம்பதாகியிருக்கும்; இல்லாவிட்டால் இரண்டொரு வருஷம் குறைவாக இருக்கும். ஆனால் உன் வாழ்க்கையில் முயற்சி என்று ஒன்று இருக்கிறது; நம்பிக்கையும் உனக்கு இருக்கிறது; அதனால் இளமையோடு வாழ முடிகிறது. இன்னுங்கூட அலுவல்களில் ஈடுபட்டு உழைக்கும் ஆர்வம் உனக்கு உண்டு. இந்த வயசில் நீ பம்பாய் புறப்பட்டு வேலைக்குப் போகிறாய் என்றதும் எனக்கு எவ்வளவு பொறாமையாக இருக்கிறது தெரியுமா? வங்காளிகளுக்குள் உன்னைப்போல் பலபேர் இப்படிச் சுறுசுறுப்பாக இருந்தால் போதும்; உறங்கிக்கிடக்கும் இந்த இனம், விழித்து முன்னேறும். இங்கே முப்பத்தைந்து வயசுக்குள் அவனவன் கழுத்தில் துளசிமணி மாலையைப் போட்டுக் கொண்டு இந்த உலகத்தை மறந்து பரலோக சிந்தனையில் ஈடுபடுகிறான். நம் கிராமம் இருக்கிற நிலையைப் பார்த்தாயில்லையா? வாழவேண்டிய நாளெல்லாம் வாழத் தெரியாமல், அங்கங்கே போய் நாலு விஷயங்களைப் பார்க்காமல், அநுபவிக்கவும் தெரியாமல் கிடக்கிறாங்களே; இவர்கள் பரலோகத்தில் போய் என்ன சாதித்துவிடப் போகிறார்கள், சொல்! அங்கேயும் பேய் பிசாசுக்கு பயந்து நடுங்குவார்கள்போல் இருக்கிறது. ஏன், நரகந்தான் கிட்டும், இந்த மாதிரி ஆசாமிகளுக்கு! நீயே சொல்; இப்படி வேலைவெட்டியின்றிச் சோம்பித்திரியும் பயங்கொள்ளிகளுக்குச் சொர்க்கத்தில் இடங்கிடைக்குமா? ஆண்டவன் அப்படி அனுக்கிரகம் செய்வாரா?”
Bibhutibhushan Bandyopadhyay, আদর্শ হিন্দু হোটেল
“பத்மாவே நம்மை இவ்வளவு மதிக்கத் தொடங்கி விட்டாள் என்றால், அதற்கு மேல் கேட்பானேன்?”
Bibhutibhushan Bandyopadhyay, আদর্শ হিন্দু হোটেল
“இப்போதும் பத்மாவிடம் ஹஜாரிக்கு மதிப்பு இருந்தது. பத்மா - ஜகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் பத்மா - அவனுடைய வீட்டுக்கு வந்திருந்தாள். அவனுடைய மனைவியோடு வலிந்து பேசிக் கொண்டிருந்தாள் என்ற செய்தியைக் கேட்டு அவனது உச்சி குளிர்ந்துவிட்டது. 'பத்மாவே நம்மை இவ்வளவு மதிக்கத் தொடங்கி விட்டாள் என்றால், அதற்கு மேல் கேட்பானேன்?' அவள் பாதம் தன் வீட்டில் படிந்ததால் ஏதோ தன் பிறவிப் பயனே கிட்டி விட்டதாக அவன் கருதினான்!”
Bibhutibhushan Bandyopadhyay, আদর্শ হিন্দু হোটেল
“அப்போது நடுவயதுப் பயணி ஒருவன் – யாசோஹர் பக்கமாகப் போகிறவன் – அங்கே வந்தான். அவன் ஹஜாரியைப் பார்த்ததும் அருகில் வந்து, “ஏங்க, தீப்பெட்டி இருக்கிறதா?" என்றான்.

"இருக்கிறது...உட்காருங்கள்.''

"நீங்கள் என்ன குலம்?"

"குலீனர்கள்."

"வணக்கம், பெரியவரே!" என்று ஹஜாரியின் காலைத் தொட்டு வணங்கினான் அந்தப் பயணி.”
Bibhutibhushan Bandyopadhyay, আদর্শ হিন্দু হোটেল
“ஹஜாரி, "கஞ்சா கிஞ்சா ஏதாவது வேண்டுமா? என்னிடம் இருக்கிறது” என்றான்.

கிருஷ்ணலால் சிரித்தபடி, "இருந்தால் கொடுங்கள், பெரியவரே! தங்கள் சித்தம் என் பாக்கியம்!" என்றான்.

"சரி உட்கார், அப்பா! இதோ கஞ்சாத்தூள் போட்டுத் தருகிறேன்."

ஹஜாரி அப்படி அதிகமாகக் கஞ்சா குடிப்பவனில்லை. இருந்தாலும் கூட்டாளி எவனாவது கிடைத்து விட்டால் உற்சாகம் மூண்டு பின்னும் கொஞ்சம் உட்கொள்வது வழக்கம்.


இப்போதெல்லாம் ராணாகாட்டில் கஞ்சா குடிக்க வாய்ப்பு இல்லை. ஓட்டலில் எல்லாரும் அவனை மதித்து நடப்பவர்கள். நரேன் வேறு இருக்கிறான். இப்படிப் பல காரணங்களால் ஓட்டலில் அப்படிக் கஞ்சா குடிப்பது சாத்தியமில்லை. வீட்டிலும் முடியாது. அங்கே டேம்பி இருக்கிறாளே! அதோடு கண்டவர்களுடனும் சேர்ந்து கஞ்சா குடிப்பதும் சரியில்லை! மட்டு மரியாதை இல்லாது போய்விடுமே!

இன்று தனக்கேற்ற கூட்டாளி கிடைக்கவே, ஹஜாரி மகிழ்வுடன் கஞ்சாத் தூளைத் திணித்துப் புகைகுடிக்க ஆயத்தமானான். தயாரானதும் கஞ்சாக்குழாயை மிகவும் பரிவுடன் கிருஷ்ணலாலின் கையில் கொடுக்க வந்தான். அப்போது கிருஷ்ணலால் நாக்கைக் கடித்துக் கொள்வதுபோல் பாவனை செய்து அடக்க ஒடுக்கமாகக் கைகுவித்தபடி, "இது என்ன? நீங்கள் பெரியவர்; நீங்கள் உண்ட பிரசாதத்தைக் கொடுத்தால் போதும்" என்றான்.

பேச்சுவாக்கில் ஹஜாரி தன்னைப் பற்றிய தகவல்களைத் தெரிவித்தான். இதைக் கேட்டதும் கிருஷ்ணலாலுக்கு மிகவும் மகிழ்ச்சி. மட்டமான ஆசாமிகளோடு பழகுகிறவன் இல்லை அவன். ராணாகாட்டில் சுய முயற்சியால் இரண்டு பெரிய ஓட்டல்களை நடத்தும் ஒரு பெரியவரோடு கஞ்சா குடிப்பது தனக்கு ஒன்றும் இழுக்கில்லை என்றுதான் பட்டது அவனுக்கு.”
Bibhutibhushan Bandyopadhyay, আদর্শ হিন্দু হোটেল
“கோபால்நகர் ரயில் நிலையத்தில் வண்டி ஏறித் தன் ஊருக்கு அருகிலுள்ள நிலையத்துக்கு வந்து சேர மூன்றணா ரயில் கட்டணம். வீணாக மூன்றணா செலவழிப்பானேன் என்று, நடந்தே ஏழெட்டுக் கல் தொலைவிலுள்ள தன் கிராமத்துக்குக் கிளம்பினான் ஹஜாரி.”
Bibhutibhushan Bandyopadhyay, আদর্শ হিন্দু হোটেল
“மாலை நேரம்; சற்று ஓய்வு எடுத்துக்கொண்டபின் ஹஜாரி
புறப்படத் தயாரானான். மறுபடியும் ஒருதரம் அந்த வீட்டு மருமகளைப் பார்க்கவேண்டுமென்று தோன்றியது அவனுக்கு. நாட்டுப்புறத்தில் அப்படி ஒன்றும் பெண்கள் தலைமறைவாகப் பின்கட்டிலேயே இருப்பதில்லை என்பது அவனுக்குத் தெரியும். மேல்சாதிக்காரரிடையேதான் இந்த விஷயத்தில் சற்றுக் கெடுபிடி; வெளியில் அதிகமாக அவர்கள் தலைகாட்ட மாட்டார்கள்.”
Bibhutibhushan Bandyopadhyay, আদর্শ হিন্দু হোটেল
“ரயில்வே நிலையத்துப் பிளாட்பாரத்திலேதான் பின்னிரவில் சற்றே படுத்து உறங்கினான். ஃபரித்புர் லோக்கல் வண்டியின் ஒலி விடியற்காலையில் அவனை எழுப்பிவிட்டது. இருந்தாலும் படுத்தபடியே இருந்தான். இன்று அவசரம் அவசரமாக அடுப்பில் சோற்றுத் தவலையை வைக்கவேண்டியதில்லையே! எழுந்து என்ன ஆகப்போகிறது? வெகுநேரம் அங்கேயே படுத்துக்கிடந்தான்.”
Bibhutibhushan Bandyopadhyay, আদর্শ হিন্দু হোটেল
“சமையலறைக்குள் நுழைந்ததும் ஹஜாரியின் மனதில் புதியதோர் உணர்வும் பலமும் உண்டாயின. ஓய்வு எடுத்துக் கொண்டு வெளியிலே போனால்தான் பல கவலைகளைக் குறித்து எண்ணத் தோன்றுகிறது. பெரிய அடுப்பின் எதிரில் கொதிக்கும் சோற்றுத் தவலையின் முன் அமர்ந்திருக்கும்போது ஹஜாரிக்குத் தான் ஏதோ வெற்றி வீரன் என்பது போன்ற பெருமிதம் ஏற்படும்.”
Bibhutibhushan Bandyopadhyay, আদর্শ হিন্দু হোটেল
“ஹஜாரி வந்த காரியமோ, பணம் கடனாகக் கிடைக்குமா என்று கேட்கத்தான். ஆனால் அந்த வெளியறையில் நுழைந்து அங்கிருந்த பெரிய நிலைக்கண்ணாடியின் முன், தலைமுதல் முழங்கால் வரையுள்ள தன் தோற்றத்தைப் பார்த்ததும் அவனுக்கு இருந்த துணிச்சலெல்லாம் போய்விட்டது.”
Bibhutibhushan Bandyopadhyay, আদর্শ হিন্দু হোটেল
“এই দিকে আসুন বাবু, গরম ভাত তৈরি, মাছের ঝোল, ডাল; তরকারি, ভাত-হিন্দু-হোটেল বাবু-”
Bibhutibhushan Bandyopadhyay, আদর্শ হিন্দু হোটেল