(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
ராஜ் கௌதமன்

“நெடுஞ்சாலையில் பஸ் பாரீஸை நோக்கிப் பறந்தது. சாலையின் இரு புறங்களிலும் மக்கள் குடியிருக்கும் பகுதிகள் வரும்போது நெடுஞ்சாலையில் ஓடும் வாகனங்களின் இரைச்சலைத் தடுப்பதற்கு உயரமான சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. தங்கள் மனிர்களுக்குத் தொந்தரவு வராமல் பார்த்துக்கொள்ளுவதில் பணக்கார நாடுகள் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்படுகின்றன. உலகத்தில் தாங்களே உயர்ந்த நாகரிகம் மிக்கவர்கள் என்பது அந்த நாடுகளைச் சேர்ந்த வெள்ளையர்களின் நம்பிக்கை. அதை மறுப்பதற்குச் சிலுவை தயாராக இல்லை; அவர்களிடையே ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றுக்கிடையில் தனிமனிதர்களின் வசதியையும் சுதந்திரத்தையும் நாகரீகமான முறைகளில் வளர்த்துக் கொள்ளுகிறார்கள். ஒவ்வொருவனும் இங்கே தன்னுடைய சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கவும் மாட்டான்; பிறத்தியானுடைய சுதந்திரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்கவும் மாட்டான். இந்தியாவில் இது தலைகீழ் விகிதத்தில் இருக்கிறது. அங்கே ஒருவன் தன்னுடைய சுதந்திரத்தை விட்டுக்கொடுப்பது தியாகம்; விட்டுக்கொடுக்காதது சுயநலம். இந்த தியாகம், சுயநலம் என்ற இரண்டு ஆயுதங்களால் யாருடைய சுதந்திரத்திலும் யாரும் தலையிடலாம்; தாக்கலாம்; நெருக்கடி செய்யலாம்; தீர்ப்புக் கூறலாம்; தண்டனை வழங்கலாம்.

சிலுவையின் இத்தகைய சிந்தனைகளை இந்தியாவில் யாரும் அறிய நேர்ந்தால் அவனுக்கு நாட்டுப் பற்று இல்லை; இக்கரைக்கு அக்கரை பச்சை என்று அலைகிறான்; இந்திய நாகரிகத்தையும் பண்பாட்டையும் சரியா அறியாத கபோதி; நமது முன்னோர்கள் என்ன முட்டாள்களா? லௌகீக நாகரிகத்தை வெறுத்து இந்திய ஆன்மீக ஒளியை நாடி வெள்ளையர்கள் இங்கே வருவது சும்மாவா? நமது தொன்மை வாய்ந்த கலாச்சாரத்தில் வேர் பிடிக்காத வீணர்களின் பிரதிநிதியாகச் சிலுவை மாறிவிட்டான் என்று விமர்சனங்கள் வரும். வந்தால் வரட்டும் என்று சிலுவை தனக்குள் பேசினான்.”

ராஜ் கௌதமன், லண்டனில் சிலுவைராஜ்
Read more quotes from ராஜ் கௌதமன்


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

1 like
All Members Who Liked This Quote



This Quote Is From


Browse By Tag