சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை ஆகிய தன்வரலாற்றுப் புதினங்களுக்குப் பிறகு ராஜ் கௌதமன் அதே பாணியில் எழுதியுள்ள பயணநூல் இது. மேலை நாட்டுப் பண்பாட்டுச் சூழலை ‘ஓர் இந்தியப் பயணி’யின் பார்வையில் அவதானிக்கவும் விமர்சிக்கவும் செய்கிறது இந்நூல். தமிழ் வாசகர்கள் மிகவும் ரசிக்கும் ‘சிலுவை’யின் சுய எள்ளலும் கிண்டலும் இதிலும் இழையோடுகிறது.
ராஜ் கௌதமன் (ஆகஸ்ட் 25, 1950), தமிழ் சங்க இலக்கியங்களின் ஊடாக தமிழ் பண்பாட்டு வளர்ச்சியை ஆய்வு செய்தவர். மார்க்ஸிய, பின்நவீனத்துவ, தலித்திய பார்வை கொண்டவர். பேராசிரியர், நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர். இலக்கியமும், அழகியலும் எவ்வாறு அதிகார வர்க்கத்தின் கருத்தியலை நிறுவிக்கொள்ள உதவின என்பதை தன் ஆய்வுகள் மூலம் விளக்கியவர்.