(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Ramachandra Guha

“இதற்கிடையே ஃபீனிக்ஸில் காந்தியின் கவனம் மீண்டும் ஆசிரமத்தில் பாலியல் ஒழுக்கமீறல் நடந்திருக்கிறது என்ற வதந்தியால் திசை திரும்பியது. ஏப்ரல் மத்தியில் ஜெக்கி மேத்தா இன்னும் மணிலால் குறித்து காதல் உணர்வுடன் இருப்பதாகத்தான் சந்தேகிப்பதாக காந்தியிடம் கஸ்தூரிபா தெரிவித்தார். காந்தி அந்த ஊகத்தை நிராகரித்தார். கஸ்தூரிபா பிரன்ஜீவன் மேத்தாவின் மகள் குறித்து அதிகமாக முன்முடிவு கொண்டிருக்கிறார் என்பதே அவர் எண்ணம்; அவர் சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஜெக்கிமீது ‘நெருப்பை உமிழ்கிறார்’.

உடனே கஸ்தூரிபா, காந்தி ஜெக்கியைப் பாதுகாப்பதாகக் குற்றம்சாட்டினார். காந்தி, கஸ்தூரிபா தேவையற்ற அச்சம் கொண்டிருப்பதாகப் பதில் சொன்னார். இந்தக் கருத்து வேற்றுமை அச்சமூட்டும் சச்சரவாக மாறியது; காந்தி தம்பதியினரின் முப்பதாண்டுத் திருமண வாழ்வில் அதுவே ஆகத் தீவிரமான பிணக்கு என்று அது குறித்த எல்லா வர்ணனைகளும் காட்டுகின்றன. அந்தக் கணவரின் தரப்பு அவர் காலன்பாக்குக்கு எழுதிய கடிதத்தில் கோட்டுச்சித்திரமாகக் காட்டப்பட்டுள்ளது:

'அவள் உடனே கூச்சலிட ஆரம்பித்தாள். எல்லா நல்ல சாப்பாட்டையும் விலக்கச் சொல்லி அவளைச் சாகடிக்கப் பார்த்தேனாம். எனக்கு அவள்மீது சலிப்பு ஏற்பட்டுவிட்டதாம்; அவள் சாகவேண்டும் என்று நினைக்கிறேனாம்; நான் ஒரு படமெடுக்கும் பாம்பாம்... நான் பேசப்பேச அவள் இன்னும் இன்னும் விஷத்தை உமிழ்ந்தாள்... இன்றைக்கு இயல்பாகவே இருக்கிறாள். ஆனால் நேற்றைய சம்பவம் என் வாழ்வில் கற்ற பெரிய பாடங்களில் ஒன்று. அவள் என்மீது வைத்த குற்றச்சாட்டுகளை எல்லாம் உணர்ந்துதான் சொல்கிறாள். அவள் முரண்பாடான உணர்வுகளைக் கொண்டிருக்கிறாள். நான் அவளை ஒரு மகன் தாயைப் பார்த்துக்கொள்வதுபோலப் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் வைத்திருக்கும் அன்பு அவளது இயல்பை மாற்றுகிற அளவுக்குத் தீவிரம் கொண்டதாகவும் சுயநலமற்றதாகவும் இல்லை. ஆம், உலகப் பற்று இல்லாமல் பணிசெய்ய விரும்பும் ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்ளக்கூடாது. அவள் ஒரு மோசமான மனைவி என்று நான் புகார் சொல்ல முடியாது. மாறாக அவள் அளவுக்கு வேறு எந்தப் பெண்ணும் தன் கணவனின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈடுகொடுத்திருக்க முடியாது. கூட்டிக்கழித்துப் பார்த்தால் அவள் என்னைக் கவிழ்த்துவிடவில்லை; மிக நல்லதொரு எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறாள். நான் சொல்லவருவது என்னவென்றால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட பெண்ணுடன் உங்களைப் பிணைத்துக்கொண்டு அதே சமயத்தில் மனித குலத்துக்காகப் பணியாற்ற முடியாது. இரண்டும் ஒத்துப்போகாது. இதுதான் அவளுக்குள் அவ்வப்போது சாத்தான் விழித்துக்கொள்வதற்கான நிஜமான காரணம். இல்லையென்றால் அவன் யாருக்கும் தெரியாமல் தூங்கிக்கொண்டே இருந்திருப்பான்'.”

Ramachandra Guha, Gandhi Before India
Read more quotes from Ramachandra Guha


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From

Gandhi Before India Gandhi Before India by Ramachandra Guha
1,500 ratings, average rating, 199 reviews
Open Preview

Browse By Tag