“மார்ச் மாதம் மூன்றாம் வாரத்தில் கேப் டவுன் நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பு இந்தியத் திருமணங்களின் செல்லுபடித்தன்மையை கேள்விக்குள்ளாக்கியது. ஹாசன் ஈசாப் என்ற, போர்ட் எலிசபெத்தில் வேலை செய்த முடி திருத்தும் தொழிலாளி ஒருவர் இந்தியாவுக்கு விடுமுறைக்கு வந்தபோது பால் மரியம் என்ற பெண்மணியை மணந்துகொண்டார். அவர் திரும்பிவந்தபோது, தன் மனைவி தன்னுடன் வசிப்பதற்காக அனுமதிச்சீட்டுக்கு விண்ணப்பித்தார். பால் மரியம்தான் அவரது ஒரே மனைவி என்றபோதிலும், நீதிமன்றம் அவரைத் தன் கணவருடன் சேர்ந்துகொள்ள அனுமதிக்க மறுத்துவிட்டது. இஸ்லாமிய மதம் பலதார மணத்தை அனுமதிப்பது இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. நீதிபதி சியர்ல் என்பவர் கூறினார், ‘இந்த நாட்டு நீதிமன்றங்கள் மொகமதிய திருமணங்கள் என்று சொல்லப்படுபவற்றை சட்டப்படியான இணை சேரலாக அங்கீகரிக்க மறுத்து முகத்தைத் திருப்பியே வந்திருக்கின்றன. காரணம் மனைவி என்ற முறையில் அனுமதிக்கப்படும் பெண் ‘வந்திறங்கிய மறுநாளே அவளது கணவனால் கைவிடப்படலாம்.’ குறைந்தபட்சம் ஒரு மனைவியாவது அனுமதிக்கப்படவேண்டும் என்ற வாதத்துக்குப் பதிலாக நீதிபதி, ‘முதலாவதாக வந்து சேருபவருக்கா முதலாவதாக மணந்துகொள்ளப்பட்டவருக்கா என்று தெரியவில்லையே’ என்று கேலியாகச் சொன்னார்.”
―
Gandhi Before India
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Browse By Tag
- love (101810)
- life (79844)
- inspirational (76261)
- humor (44491)
- philosophy (31172)
- inspirational-quotes (29035)
- god (26984)
- truth (24832)
- wisdom (24777)
- romance (24467)
- poetry (23446)
- life-lessons (22747)
- quotes (21211)
- death (20631)
- happiness (19105)
- hope (18650)
- faith (18510)
- inspiration (17504)
- spirituality (15808)
- relationships (15742)
- life-quotes (15656)
- travel (15626)
- motivational (15490)
- religion (15438)
- love-quotes (15421)
- writing (14983)
- success (14228)
- motivation (13396)
- time (12908)
- motivational-quotes (12666)

