More on this book
Kindle Notes & Highlights
by
அசோகன் கே
Read between
January 23 - February 8, 2021
1845-ல் சென்னையில் பிறந்த அயோத்திதாச பண்டிதரின் இயற்பெயர் காத்தவராயன்.
தமிழ் தவிர சம்ஸ்கிருதம், பாலி, ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்.
டி.எம்.நாயர், சி.நடேசனார் ஆகியோருடன் இணைந்து தியாகராயர் 1916-ல் உருவாக்கிய தென்னிந்திய நலவுரிமைச் சங்கமே பின்னாளில் அது நடத்திய பத்திரிகையின் (ஜஸ்டிஸ்) பெயரால் ‘ஜஸ்டிஸ் பார்ட்டி’ - நீதிக் கட்சி என்று அழைக்கப்படலானது. 1920-ல் நடந்த தேர்தலில் மதறாஸ் மாகாணத்தில் பெரும்பான்மை இடங்களை வென்றது நீதிக் கட்சி. சென்னை மாநகராட்சியில் பதவியிலிருந்த காலத்தில் தியாகராயர் ஆற்றிய பணிகள் மிக முக்கியமானவை. இந்தியாவிலேயே முன்னோடியாக சென்னை மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தவர் இவரே!
1868-ல் பாலக்காட்டில் தரவாத் மாதவன் நாயர் பிறந்தார்.
நீதிக் கட்சியைத் தொடங்கிய மூவரில் ஒருவரானார்.
அவருடைய மரணம் வரை ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். பெரியாரால் ‘திராவிட லெனின்’ என்று அழைக்கப்பட்டார். ஆனால், நீதிக் கட்சி தன் வெற்றிக்கனிகளைச் சுவைப்பதற்கு முன்பே காலமானார்.
‘திராவிடர் இல்லம்’ விடுதியை 1914-ல் தொடங்கியவர்
காளஹஸ்தியில் பிறந்த பனகல் அரசரின் இயற்பெயர் பனங்கன்டி ராமராயநிங்கார்.
1920-ல்
ல் நீதிக் கட்சி தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தபோது, முதல் ஆறு மாத காலம் சுப்பராயலு ரெட்டியார் முதல்வராக இருந்தார். பின்னர் அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து நீதிக் கட்சியின் இரண்டாவது முதல்வராகப் பதவியேற்ற பனகல் அரசர், 1926 வரை முதல்வராக இருந்தார்.
1921-ல் கொண்டுவந்த இடஒதுக்கீட்டுக்காகவே என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
பின்னாளில் அவர் மேற்கொண்ட ஐரோப்பியப் பயணம் உலகளாவிய அரசியல் சிந்தனைகளின் அறிமுகத்தையும் அவசியத்தையும் அவருக்கு உணர்த்தியது.
அவர் கருத்தில் உதித்த சுயமரியாதை இயக்கம், பின்னாளில் நீதிக் கட்சியையும் உள்வாங்கிக்கொண்டபோது திராவிடர் கழகம் என்று பெயர் மாறியது.
அவருடைய அடுக்குமொழிப் பேச்சு தமிழுக்கு ஒரு புதிய ஆபரணமானது.
திமுகவின் மாலை நேரக் கூட்டங்கள் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகளாக மாறின.
உலகிலேயே அதிகமானோர் பங்கேற்ற இறுதி ஊர்வலம் அண்ணாவினுடையது.
சென்னை மாகாணத்தில் 1937 தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ். பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கப்பட உள்ளதாக அறிவித்தார் ராஜாஜி.
சென்னையைச் சேர்ந்த தலித் இளைஞர் நடராசன் இந்தச் சித்திரவதையில் 1938, ஜனவரி 15 அன்று உயிரிழந்தார். அடுத்து 11.03.38 அன்று தாளமுத்து சிறைக் கொடுமையில் உயிரிழந்தார்.
“ஆட்சி மொழி இந்தி. ஆனால், 15 ஆண்டுகள் வரை ஆங்கிலமும் கூடுதலாகப் பயன்படுத்தப்படலாம்”
கெடுவின்படி ஆங்கிலத்தை அறவே நீக்கிவிட்டு, 1965 ஜனவரி 26 முதல் இந்தியை மட்டும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்கும் நடவடிக்கைகள் தொடங்கிய போது, 1964-ல் கிளர்ந்தெழுந்தது தமிழகம். “அய்யா தமிழைக் காப்பாற்றுங்கள். இந்தியை நுழைய விடாதீர்கள்” என்று கெஞ்சிய இளைஞரைப் பார்த்து, “இந்தப் பைத்தியத்தைக் கைதுசெய்யுங்கள்” என்று போலீஸாருக்கு உத்தரவு போட்டார் காங்கிரஸ் முதல்வர் பக்தவச்சலம்.
“ஏ தமிழே நீ உயிர் வாழ நான் துடிதுடித்துச் சாகிறேன்” என்று முழக்கமிட்டபடி கருகிப்போனார் கீழப்பழுர் சின்னச்சாமி. அடுத்து கோடம்பாக்கம் சிவலிங்கம் தீக்குளித்தார்.
போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அரசுக் கணக்கின்படியே 70 பேர்!
விளைவாக மத்தியில் சாஸ்திரி அரசு இறங்கி வந்தது. ஆங்கிலம் நீடிப்பதை உறுதிசெய்தது. திராவிடக் கட்சிகளை ஆட்சிக்குக் கொண்டுவந்ததிலும் முக்கியப் பங்கு வகித்தது இந்தப் போராட்டம்!
‘எது தேவையோ அதுவே தர்மம்!’ என்று எல்லாவற்றையும் தர்மமாக்கும் சாணக்கியனின் ‘அர்த்தசாஸ்திர’த்தோடும்,
தத்துவங்கள், பாதைகள் வெவ்வேறு என்றாலும், இந்திய வரலாற்றை அணுகும் கதையாடலில் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மூன்றுமே டெல்லியிலிருந்தே இந்தியாவைப் பார்க்க விரும்புகின்றன. மாநிலங்களைக்
அரசியலமைப்பில் மட்டும் அல்லாமல், சமூகத்தைப் பார்க்கும் பார்வையிலேயே டெல்லியிடமிருந்து திட்டவட்டமான மாற்றுப் பார்வை ஒன்று தனக்கிருப்பதையும் திராவிட இயக்கம் வழி தமிழகம் வெளிப்படுத்தியிருக்கிறது.
தீர்க்கமான கோட்பாடுகள் ஏதுமின்றி நடைமுறை அரசியலின் வாயிலாகவே இதைச் சாதித்தார்கள்.
குஜராத், மகாராஷ்டிரம் போன்ற பாரம்பரிய வணிகச் சமூகங்களின் முதலீட்டுப் பலம் தமிழ்நாட்டுக்குக் கிடையாது. வங்கம், பஞ்சாப், கர்நாடகம் போன்று நீர், நில வளமும் கிடையாது. நல்ல மழை பொழிந்து, காவிரியில் உரிய பங்கு வந்தாலும் ஐந்தில் ஒரு பங்கு நீர்ப் பற்றாக்குறை மாநிலம் இது. உத்தர பிரதேசத்தைப் போல நாட்டுக்கு 8 பிரதமர்களை அனுப்ப மக்கள்தொகை வழி பெரும்பான்மைப் பலம் கொண்ட மாநிலமும் கிடையாது;
1970-களின் தொடக்கத்திலேயே நில உச்ச வரம்புச் சட்டத்தின் மூலம் நிலப் பகிர்வைக் கொண்டுவந்தார் கருணாநிதி.
நாட்டிலேயே ஒரு மாநிலத்தில் திட்டக் குழு முதன்முதலில் அமைக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான்.
தகவல் தொழில்நுட்பத் துறைக்கான கொள்கையை நாட்டுக்கே முன்னோடியாக 1997-ல் கருணாநிதி கொண்டுவந்ததை ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.
உலகமயமாக்கல் காலகட்டத்துக்குள் இந்தியா நுழைந்த 1990-களில் உத்தர பிரதேசம் பாபர் மசூதி இடிப்புக் கலவரங்களை நிகழ்த்தி அரசியல் நிச்சயமற்ற பத்தாண்டுகளுக்குள் புகுந்ததை ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.
‘இந்தி பேசுவதாலேயே நாங்கள் டெல்லிக்காரர்களாகவோ உயர் சாதியினராகவோ ஆகிவிட முடியாது’ என்பதைச் சொல்ல ஒரு அண்ணா எங்களிடம் இல்லை!”
அரசு என்பது மைய அரசுதானே தவிர, உச்ச அரசு அல்ல;
அண்ணாவின் மரணம் திராவிட இயக்கத்தைத் தாண்டியும் ஒரு பேரிழப்பு.
அண்ணாவின் மரணம் திராவிட இயக்கத்தைத் தாண்டியும் ஒரு பேரிழப்பு!
“நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்றான மக்களவை, மக்கள்தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் உறுப்பினர்களைப் பெற்றிருந்தாலும், இன்னொரு அவையான மாநிலங்களவை - தேசிய இனங்களின் அவையாக, எல்லா மாநிலங்களிலிருந்தும் சமமான எண்ணிக்கையில் உறுப்பினர்களைப் பெற வேண்டும்’’ என்று கலைஞர் இந்தக் கூட்டத்தில் பேசியிருந்தார்.
பள்ளிக் கல்வியை முடித்து, உயர் கல்வியில் சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம்.
இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது. இவற்றில் 37 கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருப்பவை. குஜராத்தில் வெறும் 3. மபி, உபி, ராஜஸ்தான் போன்றவற்றில் ஒன்றுகூட இல்லை. இதேபோல, முதல் 100 சிறந்த பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை - 24; குஜராத் - 2; மபி - 0; உபி - 7; ராஜஸ்தான் - 4.
பிறக்கும் 1,000 சிசுக்களில் மரண எண்ணிக்கை: தமிழ்நாடு - 21; குஜராத் - 36; மபி - 54; உபி - 50; ராஜஸ்தான் - 47. தேசிய சராசரி:
ஒரு லட்சம் பிரசவத்தில் தாய் இறக்கும் விகிதம்: தமிழ்நாடு - 79; குஜராத் - 112; மபி - 221 ; உபி - 285; ராஜஸ்தான் - 244; தேசிய சராசரி: 167.
தடுப்பூசி அளிக்கப்படும் குழந்தைகள் சதவீதம்: தமிழ்நாடு - 86.7% ; குஜராத் - 55.2% ; மபி - 48.9% ; உபி - 29.9%; ராஜஸ்தான் - 31.9% ; ச...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
ஆண் - பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு. இதில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைய குறைய பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்): தமிழ்நாடு - 943; குஜராத் - 890; மபி - 918;...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
மனித வளக் குறியீடு: தமிழ்நாடு - 0.6663; குஜராத் - 0.6164; மபி - 0.5567; உபி - 0.5415; ராஜஸ்தான் - 0...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
ஊட்டச்சத்துக் குறைபாடு- குழந்தைகளில்: தமிழ்நாடு - 18%; குஜராத் - 33.5% ; மபி - 40%; உபி - 45%; ராஜஸ்தான் - 32%; சத்த...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
மருத்துவர்களின் எண்ணிக்கை (ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு): தமிழ்நாடு - 149; குஜராத் - 87; மபி - 41; உபி - 31; ரா...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்புக்கு (ஜிடிபி) இணையானதை தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநிலங்களும் அளிக்கின்றன. இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரத்துக்கு அடுத்த நிலையில் இரண்டாவது இடத்தில் இருப்பது தமிழ்நாடு.
தமிழ்நாடு - ரூ.18.80 லட்சம் கோடி; குஜராத் - ரூ.10.94 லட்சம் கோடி; மபி - ரூ.7.35 லட்சம் கோடி; உபி - ரூ.12.37 லட்சம் கோடி; ராஜஸ்தான் - ரூ.7.67 லட்சம் கோடி. தனிநபர் வருமானம் (ஆண்டுக்கு) - தமிழ்நாடு - ரூ.1,28,366; குஜராத் - ரூ.1,06,831; மபி - ரூ.59,770 ; உபி - ரூ.40,373; ராஜஸ்தான் - ரூ.65,974 ; தேசிய சராசரி: ரூ.93,293.
ஏழ்மை சதவீதம்: தமிழ்நாடு - 11.28%; குஜராத் - 16.63% ; மபி - 31.65%; உபி - 29.43%; ராஜஸ்தான் - 14.71% ; சத்தீஸ்கர் ...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது. இதில் 37 கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருப்பவை. குஜராத்தில் வெறும் 3. மபி, உபி, ராஜஸ்தான் போன்றவற்றில் ஒன்றுகூட இல்லை!