வாசகன் எனும் கதாபாத்திரம்

டேவிட் மார்க்சன் (David Markson) தனித்துவமான அமெரிக்க எழுத்தாளர். இவரது நாவல்கள் மேற்கோள்கள், தகவல்கள், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டவை

தீவிர வாசகன் ஒருவனின் சிதறுண்ட குறிப்புகளாக நீளும் இந்த வகை நாவல் புதிதானது. மரபான நாவல்களைப் போல இவரது படைப்பு ஒரு கதாபாத்திரத்தின் வழியே நிகழ்வுகளை விவரிப்பதில்லை. வாசகன் தான் இவரது புனைவின் மையக் கதாபாத்திரம். வாசகன் மனதில் பதிந்து போன இலக்கியம் மற்றும் கலை சார்ந்த நிகழ்வுகள். வரலாற்று தகவல்களைச் சிதறுண்ட வடிவிலே அழகாக வெளிப்படுத்துகிறார்.

தேர்ந்த வாசகனுக்குப் புனைவுகள் மட்டும் முக்கியமானதில்லை. எழுத்தாளனின் வாழ்க்கையும் புனைவின் ஒரு பகுதியே. அதனை அறிந்து கொள்வதிலும். அதன் புதிர்தன்மையை ஆராய்வதிலும் விருப்பம் கொண்டிருக்கிறான். ஆழ்ந்த, விரிவான வாசிப்புத் தளம் கொண்டிருப்பவரால் மட்டுமே இது போன்ற நாவலை எழுத இயலும்.

இவரது விட்ஜென்ஸ்டீனின் மிஸ்ட்ரஸ் நாவல் பரிசோதனை எழுத்தில் குறிப்பிடத்தக்கது.

Reader’s Block நாவல் வாசிக்க மிகவும் சுவாரஸ்யமானது. வியப்பூட்டும் செய்திகளும், அவதானிப்புகளும் கொண்டது. குறிப்பாக எழுத்தாளரின் மரணம், திருமண உறவு. தனித்துவமான பழக்கங்கள். விசித்திர ஒற்றுமைகள். புத்தகங்களின் விதி மற்றும் எழுத்தாளர்களுக்குள் இருந்த நட்பு பற்றிய விவரிப்புகள் சிறப்பானவை.

••

Reader’s Block நாவலில் உள்ள சில குறிப்புகள்

தாமஸ் கிரேயின் Elegy 128 வரிகள் கொண்டது. கிரே அதை எழுத ஏழு ஆண்டுகள் செலவிட்டார்.

••

பியான்சோன் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும் என்று பால்சாக் மரணத்தின் விளிம்பில். கூறினார், பியான்சோன் அவரது நாவலில் வரும் ஒரு டாக்டர்

•••

போரிஸ் பாஸ்டெர்னக் ரில்கேவை மிகவும் விரும்பினார், ரில்கே எழுதிய இரண்டு கடிதங்களைப் பல ஆண்டுகளாகத் தனது பர்ஸிலே பத்திரமாக வைத்துக் கொண்டிருந்தார்

••

புருனோ ஷூல்ஸ் தெருவில் கெஸ்தபோவால் சுடப்பட்டபோது வீட்டிற்கு ஒரு ரொட்டியை எடுத்துச் சென்று கொண்டிருந்தார்

••

ஆரம்பக் காலத்தில் தாமஸ் ஹார்டியின் முதல் மூன்று நாவல்களில் ஒன்றுகூட, இருபது பிரதிகளுக்கு மேல் விற்பனையாகவில்லை.

••

ஒரு கவிஞர் தான் எழுதி முடித்த கவிதையை ஒன்பது ஆண்டுகள் வைத்திருக்க வேண்டும் ,அதன்பின்பே அது வெளியிட தகுதியுள்ளதா என முடிவு செய்ய வேண்டும் என்கிறார் ஹோரேஸ்

••

KANT’S HABITS WERE SO PRECISE THAT SHOPKEEPERS IN KONIGSBERG ADJUSTED THEIR CLOCKS BY HIS DAILY THREE-THIRTY WALK.

••

MICHELANGELO DIED IN ROME. AND HAD TO BE SMUGGLED OUT, QUITE LITERALLY WRAPPED LIKE MERCHANDISE, TO BE BURIED AT FLORENCE RATHER THAN IN ST. PETER’S.

••

IN KONIGSBERG, WHERE HE SPENT HIS ENTIRE LIFE, IMMANUEL KANT HAD SEVERAL SISTERS AND A BROTHER AND DID NOT SEE ANY OF THEM FOR A QUARTER OF A CENTURY. AT ONE POINT HE HAD A LETTER FROM THE BROTHER AND DID NOT ANSWER IT FOR TWO AND A HALF YEARS.

•••

AT TWENTY, BACH MADE A PILGRIMAGE OF MORE THAN TWO HUNDRED MILES, ON FOOT, TO HEAR BUXTEHUDE PLAY THE ORGAN

•••••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 16, 2026 07:55
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.