Pa Raghavan
சித்தி 2 நெடுந்தொடர் வசனப் பணிக்காகத் தமிழ்நாட்டு அரசின் சிறந்த வசனகர்த்தா விருது எனக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு வந்துள்ளது. வாய்ப்பளித்த ராடன் – ராதிகா சரத்குமார் அவர்களுக்கும் விருதளிக்கும் அரசுக்கும் நன்றி.
மிக நீண்ட இவ்விருதுப் பட்டியலில் வாணி ராணி இருக்கிறது. அதில் நான் இருந்தேன். கல்யாணப் பரிசு இருக்கிறது. அதில் நான் இருந்தேன். கண்மணி இருக்கிறது. அதில் நான் இருந்தேன். தொலைக்காட்சித் தொடர் உலகில் ஒரு நல்ல காலகட்டத்தின் சாட்சிகளுள் ஒருவனாக இருந்திருக்கிறேன் என்பது நிறைவளிக்கிறது. சிற்றில், என்னுடைய இந்த வாழ்க்கையைத்தான் விவரிக்கிறது.
அனைவருக்கும் அனைத்துக்கும் நன்றி.
சிற்றில் – சின்னத்திரை நெடுந்தொடர் உலக அனுபவக் குறிப்புகள்
விருது பெறுவோர் – அரசு அறிக்கை
All rights reserved. © 2004-2025 Pa Raghavan .
Published on January 29, 2026 22:24