நன்றி

49வது சென்னை புத்தகத் திருவிழா இன்றோடு நிறைவுபெற்றது. கடந்த இரண்டு வாரங்களாக நிறைய வாசகர்களை, நண்பர்களைச் சந்தித்து உரையாட முடிந்தது மகிழ்ச்சி அளித்தது. எனது தேசாந்திரி பதிப்பக அரங்கிற்கு வந்து புத்தகங்கள் வாங்கி ஆதரித்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.

இந்த முறை இளைஞர்களே அதிக அளவில் புத்தகங்களை வாங்கினார்கள் . தனது அப்பா அம்மாவிற்கு , தோழிக்கு , நண்பனுக்கு, உறவுகளுக்கு என அவர்கள் கைநிறைய புத்தகங்களை வாங்கிக் கையெழுத்து பெற்றுக் கொண்டது வாசிப்பில் உருவாகியுள்ள  புதிய மாற்றத்தின் அடையாளமாகவே விளங்கியது

மலேசியா , சிங்கப்பூர் , இலங்கை , துபாய் அமெரிக்கா என வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகம் .

வீட்டில் செய்த இனிப்புப் பண்டங்கள் துவங்கி டயரி , பேனா , ஒவியம் எனப் பல்வேறு சிறிய பரிசுகளை எனக்கு அளித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி .

தனது முதல் நூலினை எனக்கு அளித்து அன்பைப் பகிர்ந்து கொண்ட இளம்படைப்பாளிகளுக்கும் , தங்களின் புதிய நூலை எனக்கு அளித்த சக படைப்பாளிகளுக்கும் , பதிப்பாளர்களுக்கும் மிகுந்த நன்றி .

ஸ்ருதி டிவி கபிலன் எனது புத்தகப் பரிந்துரைகளையும் அரங்கினைப் பார்வையிட்ட வாசகர்களையும் சிறப்பாகப் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்திருந்தார் . அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி .

நண்பர் சண்முகம் தேவையான உறுதுணைகளைச் செய்ததோடு இன்று வரை உடனிருந்து கவனித்துக் கொண்டார் . அவருக்கு எனது அன்பும் நன்றியும் .

அரங்கினை நிர்வாகம் செய்த ஹரி பிரசாத் , அன்புகரன் . குரு , கண்ணகி , பவன் , சுபாஷ் , மணி , சக்திப்ரியா , சிவரஞ்சனி மற்றும் டிரைவர் மணி நூல்களைச் சிறப்பாக அச்சிட்டு உதவிய நூல்வனம் மணிகண்டன் , அச்சக ஊழியர்கள் , உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி .

தேசாந்திரி நூல்களைக் கவனப்படுத்திய பத்திரிக்கையாளர்கள். தொலைக்காட்சி ஊடக நண்பர்கள், இணைய இதழாளர்கள். யூடியூப் சேனல்கள், நூல் அறிமுகம் செய்தவர்கள்.பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

49 வது புத்தகக் காட்சியினைச் சிறப்பாக நடத்திய பபாசிக்கு அன்பான பாராட்டுகள் .

.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 21, 2026 05:25
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.