இந்து மெய்யியல், இருநூல்கள்
அன்புள்ள ஜெ,
வணக்கம்.
நானும், ஈஸ்வரியும் இரண்டாவது புத்தகமாக இந்து ஞானம் அடிப்படை கேள்விகள் எடுத்து வாசித்தோம். நேற்றுடன் கலந்துரையாடலை முடித்து விட்டோம். இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் புத்தகத்தை அடுத்ததாக வாசிக்கலாம் என்று இருக்கிறோம்.
இப்போதெல்லாம் புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது திருப்தியாக உள்ளது. அதன் கருத்துக்கள் மனதில் பதிந்து விடுகிறது. மற்றவர்களுக்கு விளக்கும் போதும் , சரளமாக சொல்ல முடிகிறது. மிகவும் நன்றி ஜெ.
பின்குறிப்பு: எல்லா சுருக்கங்களையும் இணைத்துள்ளேன்.
இந்து ஞானம் Synopsis:
பழங்குடியினரின் காலகட்டத்தில், இயற்கை மதமான இந்துமதம் தோன்றியது. இன்று வரை உள்ள உணர்வு ரீதியான தொடர்ச்சியே இதன் தனித்தன்மை. இனக்குழுக்கள் இணையும் போது, சாதி தோன்றியது. சிந்து நதிக்கு அப்பால் இருந்ததால், பாரசீகர்கள் அம்மக்களை இந்து என்று அழைத்தனர். மூன்றடுக்கு நம்பிக்கை இருப்பதால்தான் இது மதம் அல்ல; இந்து தர்மம் ஆகிறது. பல வகையான வழிபாடுகள் இந்து மதத்தால் உள்ளிழுக்கப்பட்டு, உருமாறாமல் உள்ளது. உருவ வழிபாடு, அருவ வழிபாடு இரண்டும் இந்து மதத்தில் உள்ளது. ஆலயங்களை அறிவது, பக்தியை பெருக்கும். பக்தி இயக்கம் வழியாகவே தத்துவம், சாமானிய மக்களை அடைந்தது. இந்து மதத்தின் பாடத்திட்டத்தை அறிந்து, தனக்கான மரபை ஆழ்ந்த கற்பது, ஒவ்வொரு இந்துவின் கடமை.
என்றும் அன்புடன்,
S.ராஜேஷ்வரி
கோவை.
அன்புள்ள ஜெ
அண்மையில் வாசித்த இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் எனக்கு இந்து மரபு பற்றிய ஒரு மிகப்பெரிய தெளிவை அளித்த நூல்
நான் இந்து மதம் என்பதே இந்து தத்துவ மரபு என நினைத்திருந்தேன். இந்து மரபும் இஸ்லாமிய, கிறிஸ்தவ மரபைப்போல ஆன்மிகம், பக்தி ஆகியவற்றைப் பற்றி மட்டுமே சொல்கிறது என நினைத்தேன். இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்களில் நான்கு நாத்திகவாத தரிசனங்கள் என்பதும் மிகமிக ஆழமான விவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பது எனக்கு பெரிய அதிர்ச்சி. இந்து மதம் முன்வைக்கும் ஆன்மிகமும் பக்தியும்கூட அத்தனைக் கூர்மையான நாத்திகமரபுகளுடன் விவாதித்து உருவானவையே என்பது இன்னும் பெரிய அதிர்ச்சி. நான் இந்நூலை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள இன்னும் நீண்டநாட்கள் ஆகலாம். நன்றி
செல்வ. திருக்குமரன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

