மயிர் மின்னிதழில் வெளிவந்துள்ள கடல் நாவல் பற்றிய கட்டுரை. என் நாவல்களின் பொதுவான கட்டமைப்பில், மொழிப்போக்கில், கூறுமுறையில் இருந்து விலகிய நாவல் இது. இரண்டு பேரின் நீண்ட தன்னுரையாடல்களாகச் செல்லும் இந்நாவல் கிறிஸ்தவ மெய்யியலின் அடிப்படைகளைக் கொண்டு புரிந்துகொள்ளப்பட வேண்டியது. ஆனால் எந்த நல்ல நாவலும் அது எதைப்பேசுகிறதோ அதை அதுவே கற்பிக்கும் என நான் நினைக்கிறேன். ஆகவே அனைவருக்கும் உரியதுதான்.
கிறிஸ்தவ இறையியல் கற்பிப்பவரான சிறில் அலெக்ஸ் நாவல் அவரை மிகவும் பாதித்ததாகவும், விரிவாக எழுதுவதாகவும் சொன்னார். வெளியாகும் முதல் மதிப்புரை அவருடையதாக இருக்கும் என எண்ணினேன். ஜி.எஸ்.எஸ்.வி. நவீனின் இந்த மதிப்புரை முதலில் வெளிவந்துள்ளது. கிறிஸ்தவ காவியப்பின்னணியை கருத்தில்கொண்டு நாவல் முன்வைக்கும் அகநிகழ்வுகளை விரிவாகப்பேசியிருக்கும் கட்டுரை இது.
ஆழி அறிவது- ஜி.எஸ்.எஸ்.வி.நவின்
Published on September 28, 2025 11:32