அஞ்சலி: ரமேஷ் பிரேதன்

ரமேஷ் பிரேதன், இந்த ஆண்டுக்கு விஷ்ணுபுரம் விருதுக்காக தெரிவுசெய்யப்பட்டிருந்தார். கடந்த 12 ஆண்டுகளாக உடல்நிலை நலிவுற்றிருந்தார். மிகு உயர் ரத்த அழுத்தம். அது ஒரு மரபணுச்சிக்கல். அதன் விளைவான பக்கவாதம்.

நானும் நண்பர்களும் சென்ற ஆண்டுகளில் தொடர்ந்து உடனிருந்தோம். 22 ஆம் தேதி நான் அவரிடம் பேசியபோது உடல்நிலை சிறிது முன்னேற்றம் இருப்பதாகவே சொன்னார். 25 ஆம் தேதி வரை நன்றாக இருந்தவர் 26 அன்று உடல்நலிவுற்றார். இதய அடைப்பு மற்றும் மூளைக்குழாய் வெடிப்பு. மயக்க நிலை நீங்காமல் இன்று (27 செப்டெம்பர் 2025) இல் புதுச்சேரியில் மாலை 520க்கு மரணமடைந்தார்.

நம் நண்பர்களின் தொடர்புக்கு

சிவாத்மா 9488084372

கடலூர் சீனு 7010697022

இறுதிச்சடங்குகள் நாளை (28 செப்டெம்பர் 2025) அன்று மாலை 3 மணிக்கு நிகழும்

ரமேஷ் பிரேதன்
27, அங்காளம்மன் கோயில் தெரு,
அங்காளம்மன் நகர்,
முத்தியால்பேட்டை,
புதுச்சேரி- 605003.

https://maps.app.goo.gl/9gDunZDWRnLW9...

ரமேஷ் பிரேதன். தமிழ் விக்கி

 விஷ்ணுபுரம் விருது 2025 ரமேஷ் பிரேதனுக்கு…

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 27, 2025 05:22
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.