இன்று தமிழ்விக்கி தூரன் விருது விழா நிறைவு. 15 காலை நான் ஈரோட்டில் வந்து இறங்கியபோது தொடங்கிய விழா மனநிலை இன்று விருதுவிழா முடிந்து ஒவ்வொருவராக விடைபெற்றுச்சென்றபின் சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தபின் படுக்கையறைக்கு வந்தபோது களைப்புடன் நிறைவுக்கு வந்தது. உண்மையில் விருதளிப்பு நிகழ்வின்போதே களைத்திருந்தேன். இந்த முறை சென்ற ஆண்டைவிட வருகையாளர் மிகுதி. ஆகவே ஊக்கமும், பேச்சும் மிகுதி. தீவிரம் களைப்பையும் கொண்டுவந்துவிடுகிறது.
இன்று எதையும் எழுத முடியவில்லை. நாளையும் இங்கேதான் இருக்கவிருக்கிறேன். ஈரோடு கிருஷ்ணன் வழிகாட்டலில் நிகழும் கல்லூரி மாணவர்களுக்கான இலக்கிய- சிந்தனைப் பயிற்சி வகுப்புகளின் நிறைவுக்கான உரை மற்றும் சான்றிதழ் வழங்குதல். நாளை ஏதேனும் எழுத முடியுமென நினைக்கிறேன். மோகன் தனிஷ்க் எடுத்த ‘நல்ல’ புகைப்படங்களுடன்.
Published on August 16, 2025 11:31