இரா. கிருஷ்ணமூர்த்தி இந்தியாவின் தலைசிறந்த நாணயவியலாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். சேர, சோழ, பாண்டியர் கால நாணயங்களைக் கண்டறிந்து அவற்றில் பொறிக்கப்பட்ட பெயர்களையும் சின்னங்களையும் ஆய்ந்து சங்ககாலம் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றாக நிறுவினார். சங்க காலம் வளர்ச்சியடைந்த நாகரிகத்தைக் கொண்டிருந்தது என்ற உண்மையை அவரது ஆய்வுகள் புலப்படுத்தின. பண்டைத் தமிழகம் கிரேக்கம் போன்ற நாடுகளுடன் வணிகத் தொடர்பில் இருந்தததையும் அவரது ஆய்வுகள் உறுதிப்படுத்தின. தமிழ் மொழியின் தொன்மைக்கும் நாகரிகத்துக்கும் வரலாற்று ஆதாரங்களைக் கண்டடைந்ததில் ஐராவதம் மகாதேவனின் ஆய்வுகளுடன் கிருஷ்ணமூர்த்தியின் பணி ஒப்பு நோக்கத்தக்கது. தமிழ் செம்மொழி என்ற தகுதியை பெற, இவரது நாணயவியல் கண்டுபிடிப்புகளை தமிழக அரசு முக்கிய வரலாற்று ஆதாரமாக சமர்ப்பித்தது. தமிழக, தென்னிந்திய நாணயவியல் கழகங்களை நிறுவி, பல மாநாடுகளை ஒருங்கிணைத்தது இந்திய நாணயவியலுக்கு அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பு.
இரா. கிருஷ்ணமூர்த்தி
Published on August 10, 2025 11:34