கோவை புத்தகத் திருவிழாவில்

கோவை புத்தகத் திருவிழா 20255 கொடீசியா அரங்கில் ஜுலை பதினெட்டு துவங்கி பத்து நாட்கள் நடைபெறுகிறது.

இதில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது

அரங்கு எண் 67.

ஜுலை 19 சனிக்கிமை முதல் ஜுலை 21 திங்கள் வரை மூன்று நாட்கள் புத்தகத் திருவிழாவில் இருப்பேன்.

விருப்பமான வாசகர்கள். நண்பர்கள் சந்திக்கலாம்

ஜுலை 21 திங்கள் மாலை ஆறுமணிக்கு கொடீசியா அரங்கில் ``புத்தகங்களின் சரித்திரம்`` என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்.

ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் கி.பி. 1450 ஆம் ஆண்டில் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். இது ஐரோப்பாவில் புத்தகங்களை அச்சிடுவதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அன்றிலிருந்து இன்றைய மின்புத்தகக் காலம் வரை புத்தகங்கள் கடந்து வந்த மாற்றங்களை, வெற்றி தோல்விகளை, தடைகளை, வழக்குகளை, விரிவாகப் பேச இருக்கிறேன்.

அத்தோடு நூலகங்கள் உருவான விதம். உலகப்போரின் போது புத்தகங்களைக் காக்க நடைபெற்ற தீரச்செயல்கள். காலனிய ஆட்சி காலத்தில் இந்தியாவில் புத்தகங்கள் அச்சிடப்பட்ட வரலாறு. புத்தகங்களை கடத்தியவர்கள். அரிய நூல் சேகரிப்பாளர்கள். ரகசியப் புத்தகங்கள் எனப் புத்தகங்களின் அறியப்படாத வரலாற்றையும் நினைவுகளையும் பற்றியதாக எனது உரை அமையும்.

**

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2025 00:06
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.