லோகமாதேவி நூல்கள்- இலவசப்பிரதிகள்
[image error]அன்புள்ள ஜெயமோகனுக்கு,
வணக்கம்
எங்கள் எல்லோரின் நெடுநாள் ஆசை ஒன்று நிறைவேறியுள்ளது, தன்னறம் நூல்வெளி மற்றும் மனு நூல் கொடை இயக்கம் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு நிகழ்வு அது.
தாவரவியல் பேராசிரியர் லோகமா தேவி அவர்களின் கல்லெழும் விதை மற்றும் தந்தைப் பெருமரம் ஆகிய இரு நூல்களின் வெளியீடு குக்கூ காட்டுப்பள்ளியில் 28 ஜூன் அன்று பூரணமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்வில் தமிழகத்தின் வெவ்வேறு நிலப்பகுதிகளில் பச்சையம் துளிர்ப்பதற்காக பணியாற்றிய நான்கு எளிய மனிதர்களுக்கு கௌரவம் அளிக்கப்பட்டது.
[image error]ஜவ்வாது மலையில் உள்ள நெல்லிவாசல் பழங்குடி கிராமத்தில் உள்ள உண்டு உறைவிட அரசு பள்ளியில் பயிலும் தாவரவியல் மாணவர்கள் மாணவிகள் ஆசிரியர்கள் எல்லோரும் உற்சாகமாக கலந்து கொண்டனர். மேலும் ஆவாரங்குட்டை கிராமத்தை சார்ந்த சிறார் சிறுமியர் இந்த நூல் வெளியீட்டில் கலந்து கொண்டதுடன் மிகுந்த உற்சாகத்துடன் முனைவர் லோகமா தேவி அவர்களின் தாவரவியல் குறித்த அடிப்படை புரிதல் வகுப்பிலும் கலந்து கொண்டனர்.
கூழாங்கற்களும்,மரங்களும், பட்டாம்பூச்சிகளும் சூழ்ந்து இருந்த நிகழ்விடத்தில் பறவைகள் மரங்களிலும் மனிதர்கள் மண் மேலும் அமர்ந்திருந்து அந்த ஆசிரியரின் நல்லுரையை கேட்டு அகம் மகிழ உள்வாங்கி கொண்டனர். மலை கிராமத்து அரசுப்பள்ளி மாணவிகள் ஊர் திரும்பும் நேரத்தில் நிச்சயம் கல்லூரி படிப்புக்கு தாவிரவியலை தேர்ந்தெடுத்து படிக்க போவதாக மிகுந்த உற்சாகத்துடன் சொல்லி விடைபெற்றார்கள்.
[image error]Human என்றால் மண்ணில் வாழும் உயிரினம் என்ற புரிதல் ஒரு சிலிர்ப்பை உண்டாக்கியது. இழப்பின் பெருவலியை எல்லாம் பெருஞ்செயல் வழியே ஆற்றிக்கொள்ள மனிதர்கள் மற்றும் மரங்களின் உள்ளுணர்வுக்கு தெரிந்துள்ளது. மனிதர்க்கு மண்ணின் மேல் செய்யும் செயல்களும், தாவரங்களுக்கு “பரவுக, மூடுக, ஓங்குக” என்பதும் தெய்வத்தின் ஆணை.இந்த நூல்கள் தாவரவியல் ஆர்வம் உள்ள மக்கள் மட்டுமல்லாமல் இயற்கையின் அதிசயங்களை குணநலன்களை அறிந்து கொள்ள விரும்புவர்கள் எல்லோரும் வாசிக்க வேண்டியது. அறிதலின் பேரின்பத்தை எல்லோருக்குமானதாக மாற்ற இந்த இரு முக்கிய நூல்களும் கொடையாக அளிக்கப்படுகின்றன.
இந்த நூலினை விலையில்லா பிரதியாக பெற்றுக்கொள்ள கீழ்கண்ட இணைப்பு வழியே தொடர்பு கொள்ளுங்கள்
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeViarPQgwesW5Qd277wWdkLVpyzSAcQKAQ-kkjQh8YM5LvLw/viewform
இந்த முயற்சி மென்மேலும் பல்கிப் பெருக பங்களிப்பை செலுத்த விரும்புவோர் கீழ்கண்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி உதவலாம்.:
Gpay -9843870059
THUMBI
Current A/c no: 59510200000031
Bank Name – Bank of Baroda
City – ERODE
Branch – Moolapalayam
IFS Code – BARB0MOOLAP (Fifth letter is “Zero”)
ரவீந்திரன், மீனாக்ஷி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
