இன்று (4 ஜூலை 2025 ) அதிகாலை நானும் அருண்மொழியும் சைதன்யாவும் ஐரோப்பா கிளம்புகிறோம். திருவனந்தபுரம் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து விடியற்காலை 4 மணிக்கு கிளம்பி கத்தார். அங்கிருந்து சூரிச். ஐரோப்பாவில் மூன்றுநாட்கள் தத்துவ – இலக்கிய முகாம். அதன் பின் சுற்றுப்பயணம். ஆகஸ்ட் 1 அன்றுதான் நாகர்கோயில் திரும்புவோம்.
நானும் அருண்மொழியும் செல்லும் நான்காவது ஐரோப்பா பயணம் இது. சைதன்யாவுக்கு இரண்டாவது. ஐரோப்பா என்றுமே பார்த்துத் தீராத வியப்பு கொண்டது. தொன்மையானது, கூடவே நவீனமானது. இலக்கியங்களில் வாசித்த ஊர்களை நேரில் பார்க்கையில் ஒரு வியப்பும், கூடவே மிக அறிமுகமானவை என்னும் சகஜமும் உருவாவது ஓர் அரிய அனுபவம்.
Published on July 03, 2025 12:28