புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுதிக்கு தேசிகன் எழுதிய முன்னுரை நவீனத் தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம். புதுமைப்பித்தனின் தாவிச்செல்லும் அலட்சியமான நடையும், இரக்கமற்ற நையாண்டியும், வடிவச்சோதனை முயற்சிகளும் அன்றிருந்த இலக்கியவாசகர்களால் துடுக்குத்தனமானவை என்றும், திரிபுபட்ட சுவை கொண்டவை என்றும் பார்க்கப்பட்டன. அன்றிருந்த முற்போக்குப் பார்வை கொண்டவர்கள் கூட அதை அராஜக நோக்கு கொண்ட எழுத்து, நச்சிலக்கியம் என வரையறை செய்தனர். அப்போது மரபார்ந்த பார்வைகொண்டவரும், ஆங்கிலம் வழியாக உலக இலக்கியத்தை ஆழ்ந்து கற்றவரும், மிகக்கறாரான இலக்கிய அணுகுமுறைகொண்டவருமான கல்வியாளர் ஒருவர் அளித்த முன்னுரை பரவலான ஏற்பை உருவாக்கியது. நவீனத்தமிழிலக்கிய அழகியல் தமிழில் தொடக்கம் பெற அது வழிவகுத்தது.
ரா.ஶ்ரீ.தேசிகன்
Published on June 07, 2025 11:33