விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது சோ.விஜயகுமாருக்கு
அன்புள்ள ஜெ,
மே மாத கவிதைகள் இதழ் குமரகுருபரன் விருது பெறும் சோ. விஜயகுமார் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. அவரது நேர்காணல் பகுதி – 1 (நேர்காணல் செய்தவர்கள்: மதார், சதீஷ்குமார் சீனிவாசன்) இடம்பெற்றுள்ளது. கவிஞர் மதார், எழுத்தாளர் ரம்யா விஜயகுமார் கவிதைகள் பற்றி எழுதிய ‘வாயாடி’, ‘மினுங்கும் வரிகளும் உணர்வாழுவும்’ கட்டுரைகளும், ஜி.எஸ்.எஸ்.வி. நவின் எழுதிய ‘கவிஞர்கள் மேல் மட்டும் ஏன் இந்த குற்றச்சாட்டு?’ என்ற கட்டுரையும் இடம் பெற்றுள்ளன.
க.நா.சு கட்டுரை தொடரின் பகுதியாக ‘தமிழர்கள் அறியாத தமிழ் இலக்கியம்’ என்ற கட்டுரை உள்ளது.
https://www.kavithaigal.in/
கவிதைகள். சோ.விஜயகுமார் சிறப்பிதழ்
நன்றி,
ஆசிரியர் குழு
மதார், நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.
Published on May 16, 2025 11:34