1993ல் குரு வாழும் காலத்திலேயே குரு நித்யா இலக்கிய அரங்கம் தொடங்கப்பட்டது. அவருடைய மறைவுக்குப்பின் அப்பெயர் போடப்பட்டது. எல்லா ஆண்டும் மே மாதம் ஊட்டி நித்யா குருகுலத்தில் நடத்தப்பட்டது. ஏற்காட்டில் ஓர் ஆண்டு நடத்தப்பட்டது. சென்ற இரு ஆண்டுகள் ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் நிகழ்ந்தது.
இவ்வாண்டு ஊட்டியில் நடத்த திட்டமிட்டோம். ஊட்டியில் மே மாதம் பெருந்திரளும் பயணக்கட்டுப்பாடும் இருந்தமையால் ஜூனில் தேதி முடிவுசெய்தோம். ஆனால் அங்கே நிகழ்த்த முடியாத சூழல். ஆகவே முழுமையறிவு நிகழும் இடத்திலேயே நடத்த எண்ணுகிறோம்
வரும் ஜூன் 13, 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் ஈரோடு மலைத்தங்குமிடத்தில் நிகழும்.
பங்கேற்பாளர் பதிவுக்கு
programsvishnupuram@gmail.com
(இவ்வரங்கில் செலவுகளில் பங்கேற்கும் பொருளியல் சூழல் இல்லாதவர்கள் அதைக்குறிப்பிட்டு எழுதினால் கட்டணம் இன்றி பங்கேற்கலாம். கூடுதலாகக் கட்ட விரும்புபவர்கள் கட்டலாம். ஆனால் எந்த தகவலும் தனிப்பட்ட முறையிலானதே. எதுவும் வெளிப்படுத்தப்படாது.)
Published on May 08, 2025 05:09