வெளிச்சம் தமிழீழ விடுதலைப்புலிகள் முன்வைத்த மொழிவழித்தேசியம் என்னும் கொள்கையை முன்வைத்த இதழ். புலிகள் இயக்கத்தின் வெவ்வேறு பிரிவுகளில் பணியாற்றிய இளைஞர்கள் இந்த இதழில் எழுதினார்கள். இந்த இதழில் எழுதிய ஏராளமான படைப்பாளிகள் பின்னர் அறியவரவில்லை. பலர் புனைபெயர்களில் எழுதி, பின்னர் எழுத்தை நிறுத்திக்கொண்டார்கள்.பலர் கொல்லப்பட்டனர். இவ்விதழில் பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் அ.சண்முகதாஸ், ஜெயமோகன், வேலனையூர் சுரேஷ், தூயவள், நாமகள், புதுவை இரத்தினதுரை, கருணை ரவி என பலரும் எழுதியிருக்கிறார்கள். கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளியாயின.
வெளிச்சம்
வெளிச்சம் – தமிழ் விக்கி
Published on April 21, 2025 11:34