என்னிடம் ஒரு நண்பர் சொன்னார். “என் நண்பர்கள் எல்லாரும் ‘இலக்கியம்லாம் நமக்கு எதுக்கு? நாம நம்ம பொழைப்பைப் பாப்போம்’ என்று சொல்கிறார்கள் சார்”.
நான் சொன்னேன். “பிழைப்புதான் முக்கியம் என நினைப்பவர்கள் பிழைப்புவாதிகள். அவர்கள் வாசிக்கவே கூடாது. நாம் வாசிக்கச் சொல்லக்கூடாது. வாசிப்பைப் பற்றி அவர்களிடம் பேசவும்கூடாது”
வாசிப்பு ‘வாழ்பவர்களுக்கு’ உரியது. வாழ்க்கை அரியது, அதை பொருள் உடையதாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என எண்ணுபவர்களுக்கு உரியது. கலை, இலக்கியம், ஆன்மிகம் மூன்றுமே அப்படித்தான்.
ஆனால் உண்மையில் இங்கே பிழைப்புவாதிகள் பிழைப்பை மட்டுமா பார்க்கிறார்கள்? சினிமாவே கதி என கிடக்கிறார்கள். குடியில் கொண்டாட்டமிட்டு அழிகிறார்கள். அதாவது அவர்கள் இலக்கியம் என்பதை ஒருவகை ‘மேட்டிமைத்தனம்’ என நினைக்கிறார்கள். அதற்குச் செலவழிக்க அவர்களிடம் மூளை இல்லை என நினைக்கிறார்கள்.
இலக்கியம் என்பது ஒரு மேட்டிமைத்தனமா என்ன?
Published on April 18, 2025 11:36