எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்களின் தேவை 2014ல் ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டதை ஒட்டி எங்களுக்கு தோன்றியது. இதுவரை 11 ஆவணப்படங்களை விஷ்ணுபுரம் அமைப்பு உருவாக்கியுள்ளது. நாஞ்சில்நாடன் எங்கள் புரவலர்களில் ஒருவர், அனேகமாக ஞானபீடம் தவிர எல்லா விருதுகளையும் பெற்றவர் என்பதனால் விஷ்ணுபுரம் விருது வழங்கப்படவில்லை. அவருக்கு ஓர் ஆவணப்படம் உருவாக்கவேண்டும் என்னும் எண்ணம் இருந்தது. புதுவை இளவேனில் அழகும் ஆழமும் கொண்ட ஓர் ஆவணப்படத்தை உருவாக்கி முந்திக்கொண்டிருக்கிறார்.
Published on April 17, 2025 11:36