குருகு, 19
குருகு பத்தொன்பதாவது இதழ் வெளிவந்துள்ளது. தமிழ் சமூகவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வாளரும் , செயல்பாட்டாளருமான ஸ்டாலின் ராஜாங்கத்தின் நேர்காணல் இந்த இதழில் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் ஒருக்கிணைக்கும் மரப்பாச்சி இலக்கியகூடுகையில் நடந்த ஸ்டாலின் ராஜாங்கத்தின் உடனான சந்திப்பின் எழுத்து வடிவம். சுனில் கிருஷ்ணனுக்கும் நேர்காணலை எழுத்தாக்கம் செய்த விக்னேஷ் ஹரிஹரனுக்கும் நன்றி.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதி வரை தொடர்ந்த இதழியல் அறிவியக்கத்தில் நாத்திமும் பௌத்தமும் எவ்வாறு முன்னிறுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டது என்னும் சித்திரத்தை அளிக்கும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் கட்டுரை மறுபிரசுரம் செய்யப்படுகிறது.
தொடர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியவியலாளர்களின் கட்டுரைகளை குருகு இதழில் வெளியிட்டுக்கொண்டிருக்கிறோம். மோனியர் வில்லியம்ஸ், ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டை அடுத்து சமஸ்க்ருத இலக்கிய வரலாற்றை எழுதிய ஆர்தர் அந்தோனி மக்டோனெல் அவர்களின் வேத தொன்மங்களில் பற்றிய கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டு வெளிவருகிறது.
பேராசிரியர் கு. பத்மநாபன் கன்னடத்திலிருந்து மொழிபெயர்த்து வரும் ஶ்ரீகண்டய்யாவின் ‘இந்திய கவிதையியல்’ தொடர் பரவலான வாசக கவனத்தை பெற்று வருகிறது. தொடரின் இந்த பகுதி சம்ஸ்க்ருத காவிய மரபின் ‘சுவைக்கொள்கையை’ விவரிக்கிறது.
ஏனைய தொடர்களான தொன்மங்களின் ஆற்றல் மற்றும் டுடன்காமுன் கல்லறை ஆகியவை வாசகர்கள் விரும்பி படிப்பவையாக இருக்கிறது. சென்ற இதழில் தொடங்கிய நூல் அறிமுகம் பகுதியின் தொடர்ச்சியாக சிலம்பு நா செல்வராசு அவர்களின் காரைக்காலம்மையார் தொன்மம் நூல் அறிமுகம் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது.
இந்த குருகு இதழிலும் பல்வேறு சமூக, கலை, வரலாற்று தளங்களை தொகுக்கும் ஒருங்கிணைந்த பார்வையை முன்வைக்கும் கட்டுரைகளும் நேர்காணலும் இடம்பெறுகிறது வாசக நண்பர்கள் எப்போதும் போல வாசித்து எதிர்வினை ஆற்றுவார்கள் என்று கருதுகிறோம். நன்றி.
பிகு– குருகு இதழின் டிவிட்டர் பக்க இணைப்பை அளித்துள்ளோம். நண்பர்கள் இணைந்து கொள்ளலாம். எங்கள் பதிவுகளை அறிந்துகொள்ள அது உதவியாக இருக்கும்.
அன்புடன்
குருகு
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


