பெருஞ்செயல் என எதிலாவது சற்றேனும் ஈடுபட்டிருக்கவேண்டும் என்று தொடர்ச்சியாகச் சொல்லிவருகிறேன். ஒருவர் உடனே கேட்கத்தக்க வினா, எதற்காக அப்படி ஒரு கனவை ஏற்கவேண்டும் என்பதே. அது ஒரு பொறுப்புதானே? இங்கே பல ஆன்மிக உபதேசகர்கள் ஜென், ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரையெல்லாம் துணைக்கழைத்து அலுங்காமல் நலுங்காமல் வாழ்வில் ஒழுகிச்செல்வதே நல்லது என்று உபதேசம் செய்யும் காலகட்டம் இது….
Published on March 29, 2025 11:36