அஞ்சலி: ‘முத்து காமிக்ஸ்’ சௌந்தரபாண்டியன்

முத்து காமிக்ஸ் நூல்களை நான் என் எட்டாம் வகுப்பில் இருந்து படித்து வருகிறேன். இன்றும்கூட மாதம் ஆயிரம் ரூபாய்க்கு அந்நூல்களை வாங்கிவிடுகிறேன். மூளை சூடாகாமல், இயல்பாக வாசிக்கத்தக்கவை. வணிக எழுத்தின் சில்லறைப் பாவனைகளும் அற்றவை. நம்மை சிறுவனாக உணரச்செய்பவை. குறிப்பாக நான் டெக்ஸ் வில்லரின் தீவிர ரசிகன். என் நண்பர் கடலூர் சீனு, ஜா.ராஜகோபாலன் எல்லாருமே முத்து காமிக்ஸ் ரசிகர்கள்தான்.

ஐரோப்பிய ,அமெரிக்க காமிக்ஸ்களின் ஓவியச்சட்டகங்கள் மிகத்தேர்ச்சி கொண்டவை. சினிமா எனக்குச் சலிப்பூட்டுகிறது, அதில் நான் கற்பனை செய்ய ஏதுமில்லை. ஆனால் காமிக்ஸ் ஒரே சமயம் காட்சியனுபவமாகவும், என் கற்பனையைத் தூண்டும் வாசிப்பனுபவமாகவும் உள்ளது. ஆகவேதான் இந்த மோகம்.

முத்து காமிக்ஸ் நிறுவனர் சௌந்தரபாண்டியன் மறைந்தார். அவருக்கு அஞ்சலி.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2025 22:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.