சென்றகாலக் கொடுங்கனவு- கடிதம்
அன்புள்ள ஜெ,
சமீபத்தில் நீண்ட நாளுக்கு பிறகு ஒரு நாவலை படித்து முடித்தேன். வெள்ளை யானை ஆச்சரியம் என்னவென்றால் படிக்கத் தொடங்கிய முதல் வரியிலிருந்து கடைசி வரை முழுக்க முழுக்க அந்தக் காலத்தில் பயணிக்க முடிந்தது. நாவல் முழுக்கவே ஹைடன் பார்வையிலேயே அந்த காலத்து மெட்ராஸ் இருந்தது. அவன் அனுபவிக்கிற அனுபவித்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் எழுத்து மூலமாக எனக்கு கடத்தப்பட்டது.
உண்மையிலேயே இப்படி ஒருவன் இருந்து இது போன்ற ஒரு உணர்வுகளோடு வாழ்ந்திருப்பான் என்பதை என் ஆழ்மனம் மிகவும் அழுத்தமாக நம்புகிறது. நம்முடைய காலகட்டம் மனித வாழ்வியலில் மிகச்சிறந்த காலகட்டம் என்பதை நீங்கள் பல்வேறு தருணங்களில் வலியுறுத்துவதை இந்த நாவலில் மனிதர்கள் மன்னிக்கவும் மனிதர்கள் என்ற போர்வையில் அந்த ஜீவன்கள் நகரத்திலும் நகரத்துக்கு வெளியிலும் கையாளப்பட்டதை பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. பரதேசி படத்தில் ஆங்கிலேய முதலாளிகள் சந்தித்து கொண்டு அவளுடைய தோட்டத்திலே விளைந்த அளவுகளையும் மறைந்த மனிதர்கள் எண்ணிக்கையும் விருந்துக்கு மத்தியிலே கேள்வி உடன் சொல்லிக் கொள்வார்கள். அதைக் கேட்ட கணத்தை நான் நினைவு கொண்டேன் . மனித வாழ்விற்கு அவ்வளவு தான் மரியாதை இந்த காலத்தில். இப்போது இந்த புனைவு மேலும் அழுத்தம் திருத்தமாக நாம் கடந்து வந்த பாதைகளை தெளிவாகத் தெரிய வைக்கிறது. சமூக ஏற்றத்தாழ்வுகள் நம்முடைய நாட்டை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது நாம் எந்த அளவிற்கு அதில் இருந்து வெளியே வர தேவை இருக்கிறது என்பதை வெள்ளை யானை மிக ஆழமாக எனக்கு புரிய வைக்கிறது.
இந்தப் புனைவை வாசித்த பின் ஜாதிப் பற்றாளர்களை கண்டால் நீலமேகமும் துரைசாமியும் என் கண்முன்னே வந்து நிற்கிறார்கள்.
Fort St George on the Coromandel Coast. Belonging to the East India Company of Englandவேறு யாரும் கொண்டு வர முடியாத வரிகளில் வலியை உணர்த்தக்கூடிய எழுத்து உங்களுடையது. சூழல் மாறும் பொழுது மனிதன் சற்று மாறுவது இயல்புதான் என்பதை இந்த நாவலின் கடைசியில் சொல்லி இருப்பது சிறப்பு. அந்தக் காலத்து சுதந்திரப் போராட்டத்தை விட சமூகம் எந்த அளவுக்கு ஜாதியால் பிரிந்து இருந்தது என்பதை பார்க்கும் பொழுது என் மனம் மீண்டும் மிக உறுதியாக இந்த ஏற்ற தாழ்வுகளுக்கு எந்த சூழலிலும் இடம் அளிக்கக் கூடாது என்பதை உணர்ந்தேன்
நன்றி
S.நடராஜன்
கோவை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 858 followers

