01
புராதனத்தின் பறவைகளே!
தெள்ளியவானில் நிரையாகி
சொல்லருளும் சோதியென
என் திசைக்கு
வருவீரோ!
02
படுகளத்தில்
வீழ்ந்துபட்ட
குதிரையொன்று
என் கனவில்
நெடுநாளாய்
புழுக்கிறது.
கனவும்
புழுக்கிறது.
03
நான்
வண்ணத்துப்பூச்சியாக
பறந்த காடு
சாம்பலாயிற்று.
வரலாற்றின் மீதியாக
தீ எரியும் நினைவுகளில்
துளிர்க்கும்
காட்டில் மீண்டும்
வண்ணத்துப்பூச்சியாவேன்.
The post என் திசை first appeared on அகரமுதல்வன்.
Published on April 28, 2024 10:39