01
வற்றிய ஏரியின்
சதுப்புச் செடிகளில்
குழுமியிருக்கின்றன
பறவைகள்
எவ்வளவு
ஈரம்
தளும்பியிருக்கிறது
இந்த அந்தி.
02
ஒன்றையும்
பற்றாமல்
வானுயரத் துடிக்கிறது
கொடி.
எதையும் பற்றாமல்
கீழிறங்கிப் போகிறது
நிழல்.
03
பூமியை
கிளைகளாக்கி
அமர்ந்திருக்கும்
பறவைகள்
நாம்.
எக்கணம்
பறந்தாலும்
அசையும்
காலம்.
The post அசையும் காலம் first appeared on அகரமுதல்வன்.
Published on March 07, 2024 06:42