01
கிளையில்
அமராத
பறவையின்
நிழலுக்கு
சிறகில்லை
02
மீன்கள்
வாயைத் திறந்து
தொட்டி மூலையில்
குவிகின்றன.
என்ன கலகம்
என்ன கிளர்ச்சி
போதும் வாய்மூடி
நீந்துங்கள்
என்கிறாள்.
03
இத்தனை புத்தகங்களை
இத்தனை பக்கங்களை
வாசித்து என்ன தான் கண்டாய்?
இன்னும் எத்தனை எத்தனையோ
பக்கங்கள் உள்ளனவென்று
கண்டேன்.
The post நீந்துங்கள் first appeared on அகரமுதல்வன்.
Published on December 23, 2023 08:10