01
நடுவீதியில்
தனித்து நிற்கிறது
தேர்
நிலமோடித் திரண்ட
வடக்கயிறு
வேர்
உறைந்தும்
பழக்கத்தில் அசைகிறது
தெய்வம்.
02
அழிந்தவொரு
சொல்
என்னிடமுள்ளது
எரிந்தவொரு
உடல்
சொல்லிடமுள்ளது.
எங்கே
விதைப்பது
எங்கே
புதைப்பது?
03
சவம் போகும் நடுமதியம்
பலிச்சோறு கேட்டு
கரைகிறது
தனித்துப் பறக்கும் காகம்.
The post சொல்லுடல் first appeared on அகரமுதல்வன்.
Published on December 12, 2023 10:30