முதற்கனலில்…

sdr

முதற்கனல் செம்பதிப்பு வாங்க

முதற்கனல் மின்னூல் வாங்க 

எப்படித் தொடங்குவது? என்ன எழுதுவது என்று அறியாத ஒரு மனநிலை வெண்முரசு என்ற இந்த நெடுங்காவியத்தின் முதல் புத்தகமான முதற்கனல் வாசித்து முடித்த பின்.

கதைகள் வாசித்திருக்கிறேன். கவிதைகள் வாசித்திருக்கிறேன். ஆனால் இத்தனை கவிதை நடையில் கற்பனைத் தேனாக சொட்டச் சொட்ட உவமைகள் நிறைய கொண்டு எழுதப்பட்ட கதையை வாசிப்பது இதுவே முதல் முறை.

சில நேரங்களில் இத்தனை வர்ணனை தேவை தானா? இத்தனை விவரங்கள் தேவை தானா என்ற எண்ணம் எழும்போது, அதை எழுதிய ஆசிரியரின் முயற்சி மனதில் தோன்றி சிலிர்க்க வைப்பதோடு, மகாபாரதக் கதையின் மீதுள்ள ஆர்வமும் கலந்து கொண்டு பக்கங்களை வேகமாக கடக்கச் செய்கிறது.

ஒரு புத்தகத்திலே இத்தனை கதைகள், கதைக்குள் கதை என முடிவிலியாக நீண்டு கொண்டு இருக்க, இன்னும் 25 புத்தகங்கள் இந்த தொடரில் உள்ளது என்று என்னும் போது மனம் திகைத்து மீள்கிறது.மகாபாரதமே ஒரு நெடுங்காவியம், அதை மேலும் நெடுங்கதையாக, தினமும் எழுத வேண்டும் என்று தீர்மானத்தோடு 26 புத்தகங்கள், 26,000 பக்கங்கள் எழுதிய ஆசிரியரின் முயற்சி, எழுத்து வல்லமை, கற்பனைத் திறனை பாராட்டவும், நெகிழ்ந்து தலை வணங்கவும் வைக்கிறது.

சிறு வயதில், நீதிக்கதையாக கேள்விப்பட்ட மகாபாரதக் கதைகளும், அதன் உவமைகளும் கேட்டு வளர்ந்த எனக்கு அதைத் தழுவி வந்த புத்தகங்கள் தேடி வாசிப்பதில் ஆர்வம் அதிகம். விஜய் தொலைக்காட்சியில் மகாபாரதம் தொடராக வெளிவந்த போது, அதன் கதையோட்டத்தில் மந்திரங்களால் நிகழும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது எதார்த்தமான நடையில் இது எப்படி நிகழ்ந்திருக்கும் என்று பல கேள்விகள் எழுந்துள்ளன. நான் கேட்ட கேள்விகளுக்கும், கேட்காத பல கேள்விகளுக்கும் இந்த புத்தகம் பதிலளிக்கிறது.

நாகர் குலத்தலைவியான மானசாதேவியிடம் தொடங்கும் கதையில் கால் இல்லாத நாகங்களின் கால்தடங்கள் புத்தகம் நெடுக!! கதை முடிவதும் அவரிடமே!

நாம் அறிந்த மகாபாரதக் கதையின் பின்னால் தொடங்கி, முன்னோக்கி நகர்கிறது கதைக்களம்.முதற்கனல் அம்பையிலிருந்து தொடங்குகிறது.அவளின் சினத்தில் வளர்கிறது காவியம்.

திரௌபதியின் சிரிப்புதான் பாரதப்போரின் காரணம் என்று எங்கள் ஊரில் கதைகளில் சொல்லக் கேட்டதுண்டு. நானோ,இல்லை அது அவளின் கண்ணீரால் நிகழ்ந்த போர் என்று எண்ணுவதுண்டு. ஆனால் உண்மையில் அதன் மூலம் அம்பையின் சினம்!! நிராகரிப்பு தந்த ஏமாற்றம், பழிவாங்கும் உணர்வாக மாறிய பீஷ்மர் மீதுள்ள காதல்தான் என்று இப்போது தோன்றுகிறது.

இதுவரை மகாபாரதக் கதையில் பெயர் மட்டுமே கேள்விப்பட்ட சிறுசிறு கதாப்பாத்திரங்களின் முழுக்கதையும், அவர்கள் பக்க நியாகங்களையும்,கேள்விப்படாத பல கிளைக்கதைகளையும் வாசிக்க கிடைக்கும் என்று நான் இதற்கு முன் நினைத்ததில்லை. அதை சாத்தியப்படுத்திய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

ஆசிரியரின் வார்த்தைகளே கண்முன் உயிரோவியமாக விரிந்திருக்கிறது என்று எண்ணும் போது, அதை நான் மேலும் வண்ணமூட்டுகிறேன் என ஓவியர் ஷண்முகவேலின் ஓவியங்கள் கதைக்கும் நம் கற்பனைக்கும் வண்ணமூட்டுகின்றன்.

முதற்கனலின் வெம்மை நீங்கி, மழைப்பாடலில் நனையப் போகிறேன்

அனிதா பொன்ராஜ்

(முகநூலில்)

முதற்கனல், மாணவியின் கடிதம்

முதற்கனல் அன்னையரின் கதை

முதற்கனல் – விமர்சனம்

முதற்கனல் வாசிப்பனுபவம்

முதற்கனல் வாசிப்பு- இந்துமதி

முதற்கனல் வாசிப்பு- லெட்சுமிநாராயணன்

முதற்கனல் வாசிப்பு

முதற்கனல் வாசிப்பு- ஜெகதீஷ்குமார்

முதற்கனல் தொடங்கி…

முதற்கனல் – வேள்விமுகம்

முதற்கனல், மழைப்பாடல் வாசிப்பு

முதற்கனல் என் தத்துவநோக்கில்

இதிகாசமா ? புனைவா ?- முதற்கனல்

முதற்கனல் வாசிப்பினூடாக

அழியா அழல் – முதற்கனல் பற்றி சுனீல் கிருஷ்ணன்

முதற்கனல் – சுரேஷ் பிரதீப்

முதற்கனல் – நோயல் நடேசன்

முதற்கனல் – எண்ணங்கள்

முதற்கனல் வடிவம்

முதற்கனல் – சில வினாக்கள்

வெண்முரசு – முதற்கனல் முதல் பிரயாகை வரை-சுரேஷ் பிரதீப்

முதற்கனல் – கடிதம்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 15, 2023 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.