அம்மா இங்கே வா வா யார் எழுதிய பாடல்?

[image error]

அழ.வள்ளியப்பா தமிழ் விக்கி

மே.வீ.வேணுகோபால பிள்ளை தமிழ் விக்கி 

எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

என் பணிவான வணக்கங்கள்.

பொருள் : [Primary section பாடநூலில் ஆசிரியர் பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பம் ]

நான் மாநிலத்தின் சிறந்த தமிழறிஞர் என்று புரட்சித் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அன்றைய பிரதர் திருமதி. இந்திரா காந்தி அவர்களிடம் உலகத்தமிழ் மாநாட்டில் விருதும் பரிசுகளும் பெற்ற மகாவித்வான். தமிழ் இலக்கணத்தாத்தா டாக்டர். மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை (ஆசிரியர் அம்மா இங்கே வா வா) அவர்களின் பெயர்த்தி. நான் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. கல்வியாளர். சிறந்த பயிற்சியாளருக்கான விருதுகளைக் காவல் ஆணையாளர்களிடமும், தமிழக ஆளுநர்களிடமும் பெற்றிருக்கிறேன்.

தமிழ் நாட்டுப் பாடநூல் குழுவால் வெளியிடப்பட்டுள்ள primary தமிழ்ப் புத்தகத்தில் “அம்மா இங்கே வா வா” என்ற பாடலின் ஆசிரியர் அழ. வள்ளியப்பா என்று பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. இது தவறு. அது என் பாட்டனார் மே வீ. வேணுகோபாலப்பிள்ளையவர்களின் பாடல். இப்பாடல் 1965 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பாடநூல் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு primary (Lkg to III std ) பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. (இது ஒரு சிறந்த சாதனை – record break ) நீங்களும் இப்பாடலைப்  படித்திருப்பீர்கள்.  இந்த ஆண்டும் இதே பாடல் தேர்வு செய்யப் பட்டிருக்கிறது. ஆனால் ஆசிரியர் பெயர் மாற்றப் பட்டிருக்கிறது. இது திருத்தப்பட வேண்டும். இதற்கான சாட்சியங்களைச் சேகரிக்கவே நான் இத்தனை நாள்கள் பொறுத்திருந்தேன். சாட்சியங்களைக் கீழே வரிசைப்படுத்திக் கொடுத்திருக்கிறேன். தயவு செய்து இம் மாபெரும் பிழையைத் திருத்தி உதவுமாறு உங்களை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

அன்புடன் 

திருமதி. கீதாலட்சுமி ஸ்ரீநிவாசன் 

சான்றுகள்
———————-
It is proved that Author of the Tamil poem,( “அம்மா இங்கே வா வா“) “amma inge vaa vaa ” is Mahavidwan, Dr.M.V.Venugopal pillai

Evidences
No 1

Tamil Rhymes and Songs.
Hindu Temple and Cultural Society of USA.Inc.
HTCS- December 2012.
47 pages.Tamil Rhymes and Songs.

No 2

Professor . Marudhur arangaraasan’s (பேராசிரியர். மருதூர் அரங்கராசன் )edition “yaapparindhu paappunaiya” (யாப்பறிந்து பாப்புனைய )

No 3

Already I have sent. Professor. Muththukrishnan who worked in text book society till 2013 and took the caste name Pillai out of the name Venugopal Pillai

With best regards

Mrs. Geethalakshmi Srinivasan

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 15, 2023 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.