ஒரு காலத்தில் நான் மஞ்சரி மாத இதழில் தி.சா.ராஜு எழுதுவதை விரும்பி வாசித்துவந்தேன். குறிப்பாக ஓமியோபதி மருத்துவம் பற்றி அவர் எழுதுபவை அரிய வாழ்க்கைச் சித்திரங்களாக இருந்தன. ஒரு பெண்ணுக்கு பல ஆண்டுகளாக காலில் புண் ஆறவில்லை. பலர் மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை. அவளுக்கு மறதியும் அவ்வப்போது கொஞ்சம் வலிப்புச் சிக்கலும் இருந்தது. அதனால் திருமணமும் ஆகவில்லை.
ராஜு அவள் சூழலை விரிவாக ஆராய்ந்து அவள் அச்சக ஊழியர் என்பதை கண்டடைகிறார். அவளுடைய புண் வழியாக ஈயம் உள்ளே செல்கிறது. அதுதான் அவளுடைய உளச்சிக்கலுக்கும் வலிப்புக்கும் காரணம். அதை கண்டுபிடித்தபின் எளிதில் சிகிச்சைசெய்து அவளை மீட்கிறார். வாழ்க்கையில் இருந்தே நோய் உருவாகிறது. வாழ்க்கையை ஆராயாமல் நோயை கண்டுபிடிக்க முடியாது என்று அவர் அக்கட்டுரையில் சொல்லியிருந்தார்.
தி.சா.ராஜு
தி.சா.ராஜு – தமிழ் விக்கி
Published on December 02, 2022 10:34