இந்த பூமி ஆண்கள் புரண்டு உழல்வதற்கு இணக்கமானது போல் இன்னமும் பெண்களுக்கு இணக்கமாகவில்லை என்பதை மிக நுட்பமாக மூன்று வெவ்வேறு காலகட்டத்துப் பெண்களின் வழியாக சித்தரித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் வசந்த். இவருடைய ரிதம் படத்தில் வரும் கதாநாயகியின் அதே அழுத்தம் கொண்டவர்களாகவும், பெண் என்று கழிவிரக்கம் கொள்ளாதவர்களாகவும், தங்களுடைய சூழலைப் புரிந்து கொண்டு நிதானமாக அதிலிருந்து தங்களுடைய வழிகளை கண்டு கொள்ள முயல்பவர்களாகவும் இருக்கிறார்கள் இம்மூன்று பெண்களும்.
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் – முத்து
Published on September 11, 2022 11:31