சௌராஷ்டிரர் வரலாறு -கடிதம்

அன்புள்ள  ஆசிரியர்  ஜெயமோகன்  அவர்களுக்கு,

உங்கள்  வாசகன் அருண் எழுதுவது. வணக்கம்.

உங்கள் புலம்பெயர்தல் பற்றிய காணொளியை  சமீபத்தில் கேட்டேன். அதில் சௌராஷ்டிர சமூகத்தின் புலம் பெயர்தல் பற்றி ”மீ காய் கேரூன்” என்று ஒரு புத்தகம் எழுத முயற்சி  நடந்ததாக குறிப்பிட்டு இருந்தீர்கள்.  நான் சௌராஷ்டிர சமூகத்தை சேர்ந்தவன் அனால் என்  சிந்தனை  மொழி  தமிழ் தான்.  என்  பிறந்த ஊர் திண்டுக்கல்.  எனக்கு சௌராஷ்டிர சமூகத்தின் புலம்பெயர்தலின் வரலாறு  பற்றி தெரிந்து கொள்ள  ஆர்வம். எனக்கு  எங்கள் சமூகத்தின் புலம் பெயர்தல் பற்றி மிகவும் குறைவான தகவல்களே  தெரியும். நான்  தெரிந்து கொண்ட விவரங்கள் கீழ்கண்டவாறு :

கஜினி முகம்மது  படையெடுப்பின் பொது சௌராஷ்டிர தேசத்தில் இருந்து  புலம் பெயர்ந்து  பல நகரங்கில் தங்கி விஜய நகர பேரரசின் காலத்தில் ஆந்திர  தேசத்திற்கு வந்து பல காலம்  தங்கி இருந்தனர் அப்போது பெருமாள் வழிபாடு  மற்றும் அவர்களின் சில சடங்குகள்  எங்கள் சமூகத்தின்  பழக்கவழக்கங்களுடன்  கலந்தது. சில காலம் கழித்து  தமிழகம் புலம் பெயர்ந்து . இங்கு  தங்கி வாழ்கிறோம் என்பது பொது  வரலாறு.  இங்குள்ள  மன்னர்களின் அழைப்பின்  பேரில் நெசவு தொழில் செய்ய தமிழகம்  வந்ததாகவும்  கூறுகின்றனர்.

என்  முன்னோர் 3 தலைமுறைகளுக்கு முன் பழனியில்  இருந்து திண்டுக்கல் வந்ததாகவும் அவர்  மந்திரம் , போர்த்தொழில்  மற்றும் வைத்தியம்  செய்து வந்ததாகவும்  என்  தந்தை சொன்னார். எங்கள் குடும்பத்தில்  குலதெய்வமாக சிவனை  வழிபடுகிறோம். என்  தாத்தா (அப்பாவின்  அப்பா ) புரட்டாசி மாதம் சனி கிழமையில்  எங்கள் சமூகத்தில்  மற்ற அனைவரும்  பெருமாள் விரதம் இருக்கும் போது காலையிலேயே ஆட்டுக்கறி வாங்கி வருவாராம்.

எனக்கு சௌராஷ்டிர மக்களின் புலம் பெயர்தல் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆசை. நீங்கள் ஏதாவது நூல்களை பரிந்துரைத்தால்  உதவியாக இருக்கும்.

அன்புடன்
அருண்

***

அன்புள்ள அருண்

நானறிந்தவரை சௌராஷ்டிரர்களின் தமிழகக் குடியேற்றம், அவர்களின் வாழ்க்கைச்சூழல் சார்ந்து சௌராஷ்டிரர் முழு வரலாறு என்னும் நூல் உள்ளது. ஆசிரியர் கே. ஆர்., சேதுராமன், மதுரை. முக்கியமான புனைவு என ஏதுமில்லை. எம்.வி.வெங்கட்ராமின் வேள்விதீ நாவலில் உள்ளது மேலோட்டமான ஒரு சித்திரம் மட்டும்தான்.

சௌராஷ்டிரர்களின் பூர்வ வரலாறு என ஒரு சிறு நூலை லண்டன் சுவாமிநாதன் என்னும் ஆய்வாளர் லண்டன் அருங்கட்சியக நூலத்தில் இருந்து கண்டுபிடித்துள்ளார்.

ஜெ

சௌராஷ்டிரர் வரலாறு லண்டன் சுவாமிநாதன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 15, 2022 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.