தக்கலை புத்தகக் கண்காட்சி
முதற்சங்கு ஆசிரியர் சிவனி சதீஷ் குறிப்பு:
இன்று ஒரு நகராட்சி ஆணையாளரை சந்தித்து முதற்சங்கு இதழின் இரண்டு இதழ்களை கொடுத்தேன்… அவர் சில நிமிடங்கள் புரட்டிப் பார்த்துக் கொண்டு ‘பொன்னீலன், ஜெயமோகன் எல்லாம் எழுதுகிறார்கள் இல்லையா?’ என்றார்.
நான் பதிலுக்கு ‘உங்களுக்கு எந்த மாவட்டம்? பொன்னீலன், ஜெயமோகன் எல்லாம் தெரிகிறதே’ என்றேன்.
‘நெல்லை மாவட்டம், நான் கொஞ்சம் புத்தகப் பிரியன்’ என்றார்.
ஒரு மாதத்துக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று, எனக்கு மிகவும் தெரிந்த RI யிடம் முதற்சங்கு இதழை கொடுத்தேன். அட்டைப் படத்தில் இருந்த ஜெயமோகன் அவர்களைப் பார்த்து ‘இவர் தொழில் அதிபரா? அட்டைப்படத்தில் போட நல்ல காசு வாங்கி விட்டாயா’ என்றார் … இந்த RI குமரி மாவட்டத்தை சேர்ந்தவர். தேர்வு எழுத மட்டுமே புத்தகங்களை படித்தவர்.
குமரி மாவட்டம் கல்வி அறிவில் சிறந்த மாவட்டமா? நெல்லை மாவட்டம் கல்வி அறிவில் சிறந்த மாவட்டமா?… என்பதை குமரிமாவட்ட மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும்.
இதனால்தான் குமரி மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சியை நடத்த சென்னை பதிப்பகங்கள் அஞ்சுகின்றன.எனவேதான் குமரி மாவட்ட மக்களின் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க ஜூலை 15ஆம் தேதி தக்கலையில் புத்தகக் கண்காட்சியை நடத்த இந்தியப் பாரம்பரிய கலை இலக்கியப் பேரவை தனது ஆயத்தப் பணிகளை செய்து கொண்டிருக்கிறது.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 15ஆம் தேதி முதல் தக்கலையில் 11 நாட்கள் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. புத்தகக் கண்காட்சி அரங்கில் தினசரி மாலையில் நடைபெற உள்ள இலக்கிய நிகழ்வில் புத்தகங்களுக்கு விமர்சன அரங்கு நடைபெற இருக்கிறது. இந்த விமர்சன அரங்கில் உங்கள் நூல்கள் பங்கு பெற வேண்டும் என்றால் எங்களை உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்.இந்தியப் பாரம்பரிய கலை இலக்கியப் பேரவை, தக்கலை.9442008269.சிவனி சதீஷ்
முதற்சங்கு.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

