பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் வளர்ச்சி, நவீன இலக்கிய மறுமலர்ச்சி எனும் இரு கோடுகளும் வில்லியம் மில்லர் என்னும் ஆளுமையை நோக்கியே சென்று இணைகின்றன. சென்னை கிறிஸ்தவக் கல்லூரியை நிறுவியவர். மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் மேகஸீன் என்னும் இதழை நடத்தியவர். இலக்கிய சந்திப்புகள், தத்துவ விவாதங்களை முன்னெடுத்தவர். பரிதிமாற்கலைஞர், மறைமலை அடிகள் ஆகியோரின் சிந்தனைகளின் முதல்புள்ளி அவர். பி.ஆர். ராஜம் ஐயர், கா.சி .வேங்கட ரமணி ஆகியோரின் தொடக்கமும் அவரே.
தமிழ் அறிவியக்க வரலாறு முறையாக பதிவுசெய்யப்படும்போது அதில் மில்லர் தவறாமல் இடம்பெறுவார். இது ஒரு தொடக்கமாக அமையட்டும்
வில்லியம் மில்லர்
வில்லியம் மில்லர்
Published on June 04, 2022 11:34